💙💚💙 காதலை💞 தேடி...💙💚💙
K💞M Part - 16
லாரியில் இருந்து இறங்கி...
வீட்டின் ஹாலில் கொண்டு வந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த 25 பெட்டிகளை கையிருந்த லிஸ்ட் கொண்டு சரிபார்த்து கொண்டிருந்தாள் முல்லை💞....வீட்டை சுற்றி பார்த்தபடி...
வீடும் நல்லா இருக்கு..
தெருவும் Decent -a இருக்கு...
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றாள் பார்வதி அம்மா..நீங்க காயத்ரி க்கு தான் Thanks சொல்லணும் என்று..
கட்டிலை ரூமிற்கு கொண்டு போனவர்களை....இடிக்காம
பார்த்து எடுத்துட்டு போங்க என்று ஏவி கொண்டிருந்தவளை... காட்டினாள் முல்லை 💞காதில் வாங்கிய காயத்ரி.. நான் ஒண்ணும் பெருசா பண்ணிடல... எனக்கு Thanks எல்லாம் சொல்ல வேண்டாம்... என்றாள்...
பொருட்கள் அனைத்தும் இறக்கி வைத்து... பணம் வாங்கி கொண்டு நபர்கள் போனதும்....
அப்பாவுக்கு போன் போட்டு சொன்னியா..? முல்ல💞 என்றாள்... பார்வதி அம்மா...
ஆஹான் சொல்லிட்டேன் ம்மா...
எங்கே..? அந்த காயத்ரி...
இங்க தானே.. இருந்தா...
பால் பாக்கெட்டுடன் உள்ளே வந்த காயத்ரி.. இந்தாங்க Aunty பால் வாங்கணும்னு சொன்னீங்களே அதான் வாங்கிட்டு வந்தேன்..
உனக்கு எதுக்குமா..? கஷ்டம்...
கஷ்டமா..? நான் முல்லை💞யோட பெரிய fan Aunty...இப்டி அவங்களுக்கு உதவி பண்றதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சதையே பெரிய விஷயமா நினைக்கிறேன்...
சரி..ம்மா.. பால் காய்ச்ச போறேன்... போய்டாதம்மா...பால் சாப்டு போகலாம்... என்று கிச்சனுக்குள் நுழைந்தாள்..பார்வதி அம்மா...
எல்லா பொருளும் அப்டி அப்டியே இருக்கு எப்படி Aunty நான் வீட்டுக்கு போவேன்...
அட்டை பெட்டி பிரிச்சு அடுக்க ஆரம்பிக்கலாமா..?? என்றாள் காயத்ரி
நான் பாத்துக்குறேன் இன்னைக்கு நான் ஆபீஸ் க்கு லீவ் தான்..
நீ இவ்ளோ help பண்ணதே சந்தோஷம் என்றாள் முல்லை 💞