13

231 51 26
                                    

💜💛💚 காதலை💞 தேடி...💜💛💚

K💞M Part -13

எப்ப வந்தீங்கம்மா.. என்ற படி வீட்டிற்குள் நுழைந்தான் கதிர்...

அரை மணி நேரம்  ஆச்சுடா...

கல்யாணம் நல்ல படியா முடிஞ்சிதா...

எல்லாம் நல்ல படியா முடிஞ்சது..
நீ வரலனு தான் தனம் ரொம்ப வருத்தப்பட்டா....

சரி எல்லாரும் சாப்பிட்டீங்களா??.... ஆஹான் சாப்பிட்டோம்..

நீ??..டா

செந்தில் கூட வெளிய போய் இருந்தேன்..அப்டியே சாப்பிட்டேன்...

அம்மா முக்கியமான விஷயம் சொல்லாம... எதை எதையோ பேசிட்டு இருக்கீங்க...என்றாள் காயத்ரி..

ஏண்டி.. வந்த உடனே
சொல்வாங்களா!!. அப்புறம் சொல்லலாம்...

என்ன...?ம்மா...

நான் பாத்துட்டேனே...

ஹேய்!! புரியிற மாதிரி பேச
மாட்டியா..??

நான் அண்ணிய பாத்துட்டேன்னே ...

என்ன..? சொல்ற..

அப்பா நாற்காலியில் அமர்ந்தபடி... ஆமாம்..ப்பா அந்த சேலம் ஜனார்த்தனன் பத்தி சொன்னேன்ல... அவரு குடும்பத்தோட கல்யாணத்துக்கு வந்து இருந்தாரு....

பொண்ண நான் ஏற்கனவே பாத்து இருக்கேன்...இப்ப அம்மாவும் காயத்ரியும் பாத்துட்டாங்க...
ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிச்சி போச்சு என்றார்..

உங்களுக்கு எல்லாம் பிடிச்சா போதுமா??... என்றான் எரிச்சலுடன்.

ஹேய்!அண்ணா..உனக்கும் பிடிக்கும்.. ரொம்ப பிடிக்கும்...
என்ன..? கலர் தெரியுமா...?? அவங்களுக்கு Painting தெரியுமாம்... Toys making தெரியுமாம் Tailoring தெரியுமாம்... கம்ப்யூட்டர் தெரியுமாம்  மியூசிக் தெரியுமாம்..

கொஞ்சம் நிறுத்துறியா?...
எனக்கு தல வலிக்குது.. நான் படுக்க போறேன்...

நில்லு கதிர்.. நானும் பாக்குறேன் கல்யாண பேச்ச எடுத்தாலே...
கொஞ்சம் கூட ஆர்வமில்லாம நடந்துக்குற...

காதலை 💞 தேடி....#KM StoriesWhere stories live. Discover now