💛💚💛 காதலை💞 தேடி..💛💚💛
K💞M Part -8
காற்றின் இசைக்கு பச்சை வயல்வெளி தலையசைத்து கொண்டிருந்தது.....
சூரியன் சிவப்பு நிற மேகங்களுக்கு இடையே மறையும் தருவாயில் இருந்தது....கரையேறிய பெண்கள்.. மரக்கிளைகளில் கட்டிய புடவை தொட்டில்களில் உள்ள தங்கள் குழந்தைகளை தூக்கி கொண்டார்கள்...
மண்சாலையில் வந்து கொண்டிருந்த
டிராக்டரில்... கதிர் வேட்டி கட்டி....
துண்டு போட்டு இருந்தான்...
காதில் சிறிய கடுக்கண்....
புஜத்தில் தாயத்து கட்டிருந்தான்...
டிராக்டரின் பின்புறம் சிறிய ட்ரைலரில்... உரமூட்டைகள் இருந்தன..திடீரென்று ஒரு புளியம்பழம் கதிர் மீது விழுந்தது... அந்த சாலையில் புளிய மரமே இல்லாததால்.....
மேலே பறவை ஏதாச்சும் போட்டிருக்குமோ???என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் மீண்டும் ஒரு பழம் வந்து விழுந்தது...பழம் வந்த திசை புரிய... வண்டியை ஓரங்கட்டினான்... அகன்ற ஆலமரத்தின் அடியில் கல்லுப்பிள்ளையார் வீற்றிருக்க...
வீசிய காற்றில்...மரத்தின் பின்னால் தாவணியின் முனை பார்வையில் சிக்க... வண்டியிலிருந்து குதித்து இறங்கி வேட்டியை மடித்து கட்டினான்..
மெதுவாக மரத்தை நெருங்கி பிள்ளையாரை சுற்றி கொண்டு.. அந்த பக்கம் வர.. இவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு ஒரு பெண் ட்ராக்டரை எட்டி பார்த்து இவனை தேடி கொண்டு இருந்தாள்..
ஹேய்!! நீதானே என் மேலே புளியம் பழத்த தூக்கி போட்ட...
இவன் குரலில் திடுக்கிட்டு திரும்பி... நாக்கை கடித்து கொண்டாள்.... அதில் இன்னும் அழகாய் தெரிந்தாள்...
ஹேய்!! சொல்லு நீதானே..
முகத்தில் வெட்க ரேகையுடன்... தலையசைத்தாள்..
ஏன்??? அப்டி பண்ண...
உங்களுக்கு தெரியாதாக்கும்...
என்று கிசுகிசுப்பாய் பேசினாள்..எனக்கு எப்படி?? தெரியும் உன்ன இப்போ தான்....முதல் தடவ பாக்குறேன்..