5

265 59 7
                                    

💛💛💛 காதலை 💞தேடி....💛💛💛

K💞M Part -5

என்னடா...செந்தில்
இன்னைக்கு லீவ் போட்டுட்டியா???
Office-க்கு...

ஆமா...டா... பத்மா ஷாப்பிங் போகணும்னு சொல்லிட்டே இருந்தா.. எனக்கும்... கொஞ்சம் Stress-a இருந்துச்சு...அதான் இன்னைக்கு லீவ் போட்டேன்...

பத்மா டீ எடுத்துட்டு வா.. என்றான் செந்தில்...

அப்புறம் என்ன??டா விஷயம்
ஆளே பாக்க முடியல...

வேலையே சரியா இருக்குடா... நானும் உன்ன பாக்கணும்னு நெனச்சேன்....

நீயே காலையில போன் பண்ணிட்ட என்றதும்...
கதிர் cell phone ஒலித்தது...

யாரு??டா....

தனம் அக்கா... டா ஈரோடுல இருந்து...
ஒரு நிமிஷம் டா....

ஆஹான் சொல்லுக்கா என்றவன்..

எப்படி??டா இருக்க கதிர்..

நல்லா இருக்கேன் க்கா...
நீ..மாமா.. பசங்க எல்லாம் சௌக்கியமா???

எல்லாரும் நல்லா இருக்காங்கடா...
அப்புறம்.. என் மாமியாரோட..
பெரிய அண்ணன் பொண்ணுக்கு அடுத்த வாரத்துல கல்யாணம் வச்சிருக்காங்க டா..

Invitation Courier la அனுப்பிருக்கேன்.. அம்மா கிட்ட சொல்லிடு..

ஆஹான் சரி...க்கா..

என்றவன்... போன் வைத்து விட்டு செந்திலை பார்க்க....

அவனும் யாரிடமோ போன் பேசி விட்டு வைத்தான்...

வைத்தவன்.... கதிர் தோளை தட்டி வாழ்த்துக்கள் டா மச்சான்...என்றான்.

எதுக்கு???டா...

உன் wife எங்க இருக்காளோ..னு அடிக்கடி சொல்லுவியே...
சேலத்துல இருக்காங்க... என்றான்..

ஹேய்!! புரியிற மாதிரி சொல்லுடா...

உங்க அப்பா தான் இப்போ phone பண்ணாரு உன் நம்பர் busy-a இருந்துச்சாம்... அதான் எனக்கு கூப்டாரு...

உன்ன உடனே அவருக்கு call பண்ண சொன்னார்..

குழப்பதுடன்...
அப்பாவிற்கு Dial செய்தான்...

காதலை 💞 தேடி....#KM StoriesWhere stories live. Discover now