🧡💚🧡 காதலை💞 தேடி..🧡💚🧡
K💞M Part -10
புகையும் சிகரெட்டை கைமாற்றி கொண்டு கதிரின் கையை அழுத்தமாக குலுக்கினான் ஜீவா...
முல்ல 💞......Sir Name என்ன?? சொன்னே...
"கதிர்!" என்றாள் முல்லை💞..
அவளை ஜீவா உரிமையோடு பெயர் சொல்லி அழைத்து... ஒருமையில் பேசியது கதிருக்கு காரணம் இல்லாமல் எரிச்சலை தந்தது....
அவன் பிடியிலிருந்து கையை விடுவித்து கொண்டான்... புன்னகைப்பதை நிறுத்தி கொண்டு வாட்சை பார்த்தான்....
கதிர்.. இவங்க Name ஜீவா...
இங்க எடிட்டர்.. ரொம்பவும் திறமைசாலி....
புத்திசாலியும் கூட ..ஹேய்!! போதும் மா..
நீ சொல்றதை பார்த்தா ஈவினிங்...
ஐஸ் கிரீம் பார்லருக்கு கூட்டிட்டு போக சொல்லுவ போலருக்கு..அப்டியே கூட்டிட்டு போனாலும் ஒரு கோன் ஐஸ் க்கு மேல
வாங்கி கொடுத்துடுவியா?? நீ....
கஞ்ச திலகமே...ரிக்கார்டிங் எத்தனை மணிக்கு என்று இடையில் புகுந்தான் கதிர்...
எல்லாரும் வந்துட்டாங்க இன்னும் பத்து நிமிசத்துல Start பண்ண வேண்டியது தான்..
வாங்க செட்டுக்கு போலாம்...
அப்புறம் பாக்கலாம் ஜீவா என்றாள்...இருவரும் நடந்த போது....
ஜீவா ரொம்ப Intresting Character....
ஒரு நாள் லீவ் போட்டா கூட...
ஆபீஸ் துக்கம் அனுஷ்டிக்கிற மாதிரி அவ்ளோ அமைதியா இருக்கும் என்றாள் முல்லை💞..அவர்களின் பேச்சில் முல்லை அவனோடு ஐஸ் கிரீம் பார்லருக்கு போயிருக்கும் தகவல் முள்ளாக நெருட...
அப்படியா!! என்றான் வலிய சிரித்து...இவனுக்கு அமைஞ்ச Wife-ம் அதே மாதிரி தான் ரொம்ப Jolly Type...
ஜீவா கல்யாணம் ஆனவனா!!?.... அப்போ முல்லை 💞அவன் கூட பழகுவது நட்பு ரீதியில்....என்றதும்
நொடியில் கதிர் மனதில் முள் விலகி மீண்டும் தென்றல் வீசியது...அழகாக வடிவமைக்கப்பட்ட
செட்டில் மூவருக்கும் சோபா போட பட்டிருந்தது.....கதிருக்கு... அந்த இருவரையும் அறிமுக படுத்தி வைத்தாள்....எதிர்ப்புறம் கேலரி போல அமைக்க பட்டு 15 பேர் அமர்ந்திருந்தனர்...