💚💚💚 காதலை💞 தேடி...💚💚💚
K💞M Part - 23
கொலுசு மற்றும்
வளையல் ஒலி சப்திக்க..
கையில் பால் சொம்புடன்...
கதவை தாளிட்டு.. வெட்க ரேகையுடன் கதிரை நோக்கி நடந்து வந்தாள் முல்லை 💞ஒரு வித ஆனந்த அலையில் மூழ்கியவனாய் கட்டிலில் அமந்திருந்தான் கதிர்...
ஏனோ முதல் முறை தன்னை பார்க்க அவள் ஆபீஸ் கதவை திறந்து வந்தது... அவன் நினைவில் வந்து சென்றது...
அருகே வந்தவள் பால் சொம்பை மேஜை மீது வைத்து விட்டு.... அவனின் காலில் விழுந்து வணங்க குனிந்தாள்...
சட்டென்று...ஹேய்!!! என்ன? பண்ற.. என்று தோள்களை தாங்கி...வா இப்டி உக்காரு...என்றான்..
என்ன?? இதெல்லாம் கால்ல விழுந்துட்டு... மீடியால Work பண்ணிட்டு இந்த சம்பிரதாயம் எல்லாம் Follow பண்ற...
அப்டி இல்ல..ஏதோ தோணுச்சு..
தமிழ் சினிமா உன்னையும் கெடுத்து வச்சிருக்கு போல..என்று சிரித்தான்..
அம்மா தான் சொன்னாங்க.. அதான்.. வேண்டாம்னா போ..ங்க...
சரி சரி...
பால் சாப்பிட்றியா??என்றான்.இல்லங்க வேண்டாம்....
இருவரும் சில நொடி மௌனமாகினர்.....
அவள் தன் கைகளின் வளையல்களை பார்த்தபடி இருந்தாள்...
ஒரு வித மந்திர புன்னகையை உதட்டில் தாங்கி அவளையே பார்த்து கொண்டிருந்தான்...கதிர்
என்னாச்சு??அமைதியா இருக்க...
உங்க முகத்த பாக்கவே முடியல..
ஒரே வெக்கமா வருது...ஏன்...?? என்றான் சிரித்து...
விரல் நகங்களை பார்த்தவாறு தெரியலங்க..
நீ சரியாவே சாப்பிடல..
ஆப்பிள் சாப்டறீயா...?? கொஞ்சம்..இல்லங்க வேண்டாம்....
பசிக்கவே இல்ல...நீங்களும் தான் சரியா சாப்பிடல...
ம்ம்ம்...சோகத்துல இருந்தா பசிக்காதுனு சொல்லுவாங்க..