பாகம் 10

204 30 10
                                    

விடிந்தாள் தீபாவளி யார் முகத்திலும் பொட்டு சந்தோஷம் இல்லை. அம்மாவானால் மதுவிடம் முகம் கொடுத்துப் பேசுவது கூட இல்லை. சத்யா தீபாவளிக்காக வீட்டுக்கு வந்திருந்தான் ஆனால் அவன் முகத்திலும் எந்த சந்தோஷமும் இல்லை. அம்மா அப்பா புத்தாடை கூட வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்கள். இத்தனைக்கும் காரணம் அவள் என்று எண்ணிய போது மனம் வலித்தது. ஆனால் நிஜத்தில் இத்தனைக்கும் காரணம் அவன் தான். அவன் தான் பணத்தைக் காட்டி இந்த குடும்பத்தையே விலைக்கு வாங்கி விட்டான். இல்லாவிட்டால் எப்படி நேற்று பார்த்த ஒருவனுக்காக தன் குடும்பமே தன்னை எதிர்க்கும்! அத்தனை தூரம் போய் சொல்லியும் இது வரை இந்த திருமணத்தை நிறுத்த ஒரு முயற்சி எடுக்கவில்ல அவன். அவன் ஒன்றை நினைத்து விட்டாள் அதை அடைந்தே தான் தீருவான் போல என நினைத்த போது அவன் மீது ஆத்திரமாக வந்தது அவளுக்கு. ஆனால் தன் விருப்பு வெறுப்புக்கு இங்கு என்ன மரியாதை. ஆளாளுக்கு emotional black mail செய்து கொண்டு இருந்தனர் அவளை.

"இங்க பாரு மது. உன்னை பெத்தவ நான் சொல்றேன். உனக்கு ஒரு நல்லது நடந்தாலும் சரி கெட்டது நடந்தாலும் சரி அது இந்த அம்மாவை தாண்டி தான் வரணும். இந்த வரன் உனக்கு நல்லது. நீ பயப்படற மாதிரிலாம் ஒன்னும் நடக்காது. தயவு செய்து இதை பண்ணிக்கோ. அம்மா இவ்வளவு சொல்லியும் நீ உன் இஷ்ட்டப்படி தான் பண்ணுவேன்னா அப்பறம் உன் இஷ்ட்டம்" என்றாள் அம்மா கடைசியாக.

"எதையுமே யோசிச்சு முடிவு எடுக்கறது நல்ல பழக்கம் தான். ஆனா அதுக்காக இப்படி எல்லாத்துலயுமே நெகட்டிவ்ஸ்சை மட்டுமே நிட் பிக் பண்ணக் கூடாது. இது வரை உன் வாழ்க்கைல எல்லா முடிவையுமே நீ தான் எடுத்திருக்க. நாங்க உங்க சுதந்திரத்துல என்னைக்கிமே தலையிட்டதில்லை. இப்போ தலையிடுறோம்னா நீ உன் லைஃப்ல முதல் முறையா ஒரு தப்பான டிசிஷன் எடுக்கப் போறன்னு அர்த்தம். அந்த தப்பை நீ பண்ணாம தடுக்க் தான் நாங்க இவ்வளவு முயற்சி பண்றோம். புரிஞ்சிக்கறதும் புரிஞ்சிக்காததும் உன் கைல தான் இருக்கு" என்றார் அப்பா.

மதுரதி Donde viven las historias. Descúbrelo ahora