அஸ்ஸலாமு அலைகும் மக்களே!
வட்பேடிலிருந்து காணாமல் போயிருந்து விட்டு வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளேன். என்னை உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் ஹெஹெ..
'காயம்' எனும் இக்கதை இன்று தான் என் மனதில் உதித்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இப்போது மூன்று மணித்தயாலங்களுக்கு முன்பு தான் மனதில் தோன்றியது. இதை இப்போழுதே எழுதினால் என்ன? என்று தான் அதே வேகத்தில் எழுதத் தொடங்கினேன்.
எனது மற்ற கதைகளைப் போல் இது வெகு நீளமாக எல்லாம் இருக்காது. சில அத்தியாயங்களுடன் முடிந்து விடும். இரண்டு கதைகளை ஆரம்பித்து இடையில் விட்டது போல இதை விட மாட்டேன் இன்ஷா அல்லாஹ்.
கதையை முழுமையாக மனதில் யோசித்து வைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவிடுகிறேன். இக்கதை எந்த அளவுக்கு ஆர்வமாக இருக்கிறது என்பதை நீங்கள் தான் வாசித்து விட்டு எனக்குச் சொல்ல வேண்டும் நண்பர்களே.
வெகு காலத்துக்குப் பிறகு கதை எழுதும் ஆசை மீண்டும் பிறந்திருக்கிறது. உங்கள் ஆதரவு என்னை நிச்சயமாக மேலும் ஊக்குவிக்கும்.
-மர்யம்
![](https://img.wattpad.com/cover/330257645-288-k632984.jpg)
KAMU SEDANG MEMBACA
காயம்✔️
Spiritualகவலைகளே இல்லாமல் சிட்டாய்ப் பறந்து திரிந்தவள் மனதில் ஒரு காயம் ஏற்படுத்தப்பட்டு விடுகிறது. அது எவ்வாறு ஏற்பட்டது, யார் அதனை ஏற்படுத்தியது, பின்னர் அந்தக் காயம் எப்படி ஆறியது என்பதே இக்கதை. '''_இருவருடைய உள்ளங்களிலும் இரண்டு விதமான சலனம். ஹயாத்தின் ம...