பகுதி -4

10.7K 225 10
                                    

4 ஆண்டுகளுக்கு முன்,

நிரன்ஜ் வீட்டில்,

வேலு எல்லாம் ரெடி ஆய்டுச்சா??-வள்ளி
எல்லாம் ரெடிமா.... நீங்க சொன்ன எல்லா காய்கறியும் கட் பன்னிடன்..-வேலு

ம்ம் சரி சமையல் பன்ன நா கேட்கறதெல்லாம் வந்து எடுத்துக்கொடு- வள்ளி.

சரி மா இதோ வர்ரேன் என்று சமையலறையில்இருவரும் நுழைந்தனர்.

வள்ளியம்மா சமையல் செய்ய தொடங்கினார்.

என்ன பாட்டி 2 நாளைக்கு முன்ன ஒரு வேலையும் செய்ய முடிலனு படுத்திருந்திங்க... இப்ப என்னடான தடபுடலா எல்லா வேலையும் நடக்குது..... ம்.... நடத்துங்க நடத்துங்க..... உங்களுக்கு என்ன விட அண்ணன்தான ஸ்பெசல்.... அவரு யூ.எஸ்லருந்து திரும்பி வராருனு தெரிஞ்சதும் உங்கள கையில பிடிக்க முடியல என விளையாட்டிற்கு சலித்துக்கொள்வதை போல நடித்தாள் பூர்வி(நிரன்ஜின் தங்கை
அக்ரிகல்ச்சர் படித்துவிட்டு ஒரு பார்மில் பணியாற்றி வருகிறாள். திருமணம் நடந்து தற்போது ஏழு மாத கர்பிணியாக தாய் வீட்டில் இருக்கிறாள். கணவர் பெயர் சுரேஷ்-அவள் வேலை செய்யும் பார்மின் பார்ட்னர்.)

அப்டிலாம் இல்ல வாலு உனக்கு என்னவேனும் சொல்லு இந்த பாட்டி உனக்கு செஞ்சுதரேன்... எனக்கு இரண்டுபேருமே ஒரேமாதிரிதான்.... இவ்ளோ நாள் தம்பி ஒழுங்கா சாப்டிச்சோ இல்லயோ..அதான் அதுக்கு புடிச்சது எல்லாம் செஞ்சு வச்சுருக்கேன்..-பாட்டி
ம்.. நா நம்பிட்டேன்... என விளையாட்டிற்க்கு பூர்வி சண்டை ஆரம்பிக்கும் போதே, வாசலில்
ஹாரன் சத்தம் கேட்டது.. அங்கிருந்த அனைவரும் வாயிலிற்கு சென்றனர்....

காரிலிருந்து நிரன்ஜ் , தன் தாத்தா பாட்டியுடன் இறங்கி வந்தான். வள்ளியம்மா வேலுவை ஆரத்தி தட்டு எடுத்து வர சொல்லி ஆரத்தி எடுத்து அவனை வரவேற்றார்.
பூர்வி தன் அண்ணனை கட்டியனைத்து வரவழைத்தாள்.
ஐ மிஸ் யூ ஸோ மச் அண்ணா-பூர்வி.
ஐ மிஸ் யூ ட்டூ வாலு- நிரன்ஜ்.

ஹாய் மச்சான் வாங்க ஹவ் ஆர் யூ??..... நீங்க வரபோறிங்கனு தெரிஞ்சதுலருந்து உங்கதங்கச்சிய கைல புடிக்க முடியல போங்க...-சுரேஸ்
ஐம் பைன்.... மாப்ள .... நீங்க எப்டி இருகிங்க? .... என்ன சொல்றான் என் மருமகபிள்ள?.....-நிரன்ஜ்

இப்போருந்தே உங்க தங்கச்சிய உதைக்க ஆரம்பிச்சுட்டான்... ஹஹஹ-சுரேஸ்.

இன்னும் 2மாசம்தான் வெய்ட் பன்னுங்க..உங்களுக்கும் விழும்-பூர்வி.
ஆரம்பிச்சுட்டிங்களா .... மொதல்ல அவன உள்ள விடுங்க. என சரோஜா சண்டையிட ஆரமித்தவர்களை தடுத்தாள்.

அனைவரும் அவரவர் ரூமிற்கு சென்று பிரஸ் ஆகி.. பின் உணவருந்த தொடங்கினர்.

வள்ளியம்மா இன்னைக்கு என்ன, அசத்திட்டிங்க போங்க..உங்க கையால சாப்டு ரொம்பநாள் ஆய்டுச்சு..... நாக்கு செத்துபோனமாதிரி இருந்துச்சு.... எல்லாமே எனக்கு புடிச்ச சாப்பாட்டு வகை..... ஒரு கட்டு கட்ட போறேன்..-நிரன்ஜ்
உங்களுக்காகதான தம்பி எலலாம் .. நல்லா சாப்டுங்க... துரும்பா எலச்சுட்டிங்க-வள்ளி.
அனைவரும் சாப்பிட்டு முடித்து. ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

நிரன்ஜ் சுரேஸிடம், என்ன மாப்ள செக்கப்லாம் பன்னிங்கலா?? டாக்டர்ஸ் என்ன சொன்னாங்க?எந்த ஹாஸ்பிட்டல் என கேள்விகளை அடுக்கினான்.
அதுவா மச்சான்.. பவானி ஹாஸ்பிட்டல் என் பிஸ்னஸ் பார்ட்னரோட அக்கா அங்கதான் டாக்டரா இருக்காங்க ... அவங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் சர்மிளாகிட்ட பார்க்ரோம். நல்லா பார்க்ராங்க...-சுரேஸ்.

இவ்வாறு அரட்டை அடித்து அனைவரும் இரவு டின்னர் முடித்து அவரவர் அறைக்கு உறங்க சென்றனர்.
சுரேஸ் 30கிமீ தொலைவில் உள்ள தன் வீட்டிற்கு சென்றான்..

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now