அன்றிரவு ஸ்டடி ரூமிற்கு சென்றவன் அங்கேயே உறங்கிவிட்டான்...
காலையில் எழுந்து தன் அறைக்கு சென்றவன்.... அங்கு ரியா இல்லாததால் வள்ளி பாட்டியிடம் கேட்டான்.
அவர் அவள் ஹாஸ்பிட்டலுக்கு சென்றிருப்பதாக கூறினார்.
அவளை இப்போது கூப்பிட்டால் கண்டிப்பாக தன்மீது கோபபடுவாள் என ஈவ்னிங் பேசலாம் என ஒப்புக்கொண்டான்.அன்று ரியா சீக்கிறமே வீட்டிற்கு வந்தாள். அப்போது நிஷா அவளிடம் வந்து ஏதோ பேசிக்கொண்டிருப்பதை வள்ளி பாட்டி கவனித்தார்.
ஏதோ கவலையில் ரியா இருப்பதாக அவருக்கு தோன்றியது.
அடுத்து வந்த நாட்களில் சண்டை அதிகமானதே தவிர ரியா அமைதியாகவில்லை.
நவீன் நிஷாவிடம் போட்டோ மற்றும் வீடியோவை பற்றி கேட்டதற்கு அவளுக்கு ஒன்றும் இதை பற்றி தெரியாது என்பதை போல சமாளித்தாள். வேண்டாதவர்கள் யாரவது இப்படி பன்னிருப்பாங்க... இத ரியா ஏன் நம்பினாள் என்றெல்லாம் நிஷா நாடகமாடினாள்.தன்னவளுக்கே தன் மீது நம்பிக்கை இல்லாததை நினைத்து நவீன் மனமுடைந்தான்.
இது ஒருபக்கமென்றால் அவள் டிவோஸ் பேப்பரில் ஷைன் கேட்டதில் அதைவிட அதிர்ந்தான்.நவீன் எனக்கு உன்மேல நம்பிக்க இல்ல... நா நல்லா இருக்கனும்... உயிரோட இருக்கனுமுனு நெனச்சனா... தயவு செய்து என்ன விட்று.... இதுதான் ரியா அவனிடம் கடைசியாக பேசியவை.
இரு நாட்களுக்கு பிறகு....
வள்ளி பாட்டி அவளிடம் விடாப்படியாக கேட்டதால் நம்பிக்குரியானவர் என்பதால் அவரிடம் அனைத்தையும் கொட்டிவிட்டாள்.
தான் வீட்டை விட்டு செல்வதையும்தான்.....
அனைத்தையும் கேட்ட வள்ளி பாட்டிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அதையே மனதில் போட்டு குழப்பிக்கொண்டிருந்த பாட்டி... தனக்கு ஆதரவு அளித்த குடும்பத்திற்கு தான் எதாவது செய்யவேண்டும் என நினைத்தார்.
எப்படியும் ரியா தன் முடிவை மாற்றி கொள்வதாக இல்லை....அவள் குடும்பத்திடமும் இதைபற்றி கூற மறுத்துவிட்டாள்.
இப்போது அவள் இருக்கும் நிலமையில் அவள் தனியாக போவது சரியில்லை... இதை பற்றி தெரிந்த நான்தான் ஏதாவது செய்யவேண்டும் என நினைத்தார்
VOUS LISEZ
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
Fiction générale"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want...