பகுதி-7

8.2K 202 8
                                    

விக்கி யாருக்கு என்ன ஆச்சு???? ஏன் எல்லாம் இங்க இருகிங்க???-சுரேஸ்.

அது வந்து அம்மா மயங்கி விழுந்துட்டாங்க.... அதான் இங்க அட்மிட் பன்னிருக்கோம்....-விக்கி.

என்ன சார் சொல்றிங்க.... இப்போ ஆன்டி எப்டி இருக்காங்க.... ரியா அக்கா எங்க???-பூர்வி.

அம்மா இப்போ நல்லார்காங்க..... லோ பிபினாலதான் அதுமில்லாம சத்து குறைவா இருக்கறதுனாலதான் இப்படி..... நல்லா சாப்ட்டு ரெஸ்ட் எடுக்க சொன்னா எங்க கேட்கறாங்க..... எல்லா வேலையும் தானே தலைல தூக்கி போட்டுகிறாங்க..... அக்காவும் அப்போ வீட்ல இல்ல நைட் ட்யூட்டி அதான் இங்க கூட்டிடு வந்துட்டோம்..- விக்கி.
சரி வாமா பூர்வி போய் பாரதிய பார்த்துட்டு வரலாம்-சரோஜா

(பூர்வி , விக்னேஷ்-சுரேஸ் இணைந்து நடத்தும் "பசுமை" பார்மில் பணிபுரிகிறாள். அவள் வேலைக்குச்செல்ல அவசியமில்லை என்றாலும் தன் இன்ரஸ்டினால் பணிக்கு சென்றாள். பின் சுரேசும் பூர்வியும் காதலித்து, அவ்விரு குடும்பமும் தூரத்து உறவினர் என்பதால் இரு குடும்ப சம்மதத்துடன் சில பிரச்சனைகளுக்கு பிறகு ஒன்றிணைந்தனர்.... இத்தருணத்தில் ரியா மற்றும் நிரன்ஜின் குடும்பங்கள் நல்ல நண்பர்களாயினர். ரியாவிற்கு இவர்களின் திருமணம் போது தேர்வு நடந்ததால் அவளால் வர இயலவில்லை. தங்கையின் திருமணத்திற்கு பின் நிரன்ஜிம் மீண்டும் யூ.எஸ் சென்றுவிட்டான்)

அனைவரும் பாரதி இருக்கும் அறைக்கு சென்றனர். பின் சரோஜா பாரதிக்கு உடல்நிலை பார்துகொள்ள அறிவுரைகள் வழங்கினார்.
ம் பார்த்துகிறேன்ம்மா..... தம்பி வந்துட்டாரா.... வேலைலாம் எப்படி போய்டிருக்கு....-பாரதி.
எல்லாம் நல்லா போகுதும்மா.. உடம்பு நல்லானதும் வீட்டுக்கு வாங்க சரியா......-சரோஜா.
ம் சரிங்க தம்பிய கேட்டதா சொல்லுங்க..
பாரதி பூர்வியிடம், பூர்வி இங்க வாமா... என்ன சொல்றான் பேரபுள்ள.... குழந்த ஆரோக்யமா இருக்கானாம்மா??? இந்த மாத செக்கப் முடிஞ்சுதாமா என வினவினார்.
ம்ம் நல்லார்கான் ஆன்டி.... இனிதான் போய் செக்கப் பன்னனும்..ஆமா ரியா அக்கா எங்க???-பூர்வி.
இப்பதாமா கிளம்பி ரௌன்ட்ஸ் போனா என சொல்லிக்கொண்டிருக்கும் போதே.. ரியா,கௌதம்,அணு ... மூவரும் அங்கு வந்தனர்.
ஹாய் ஆன்டி,ஹாய் பூர்வி , சுரேஸ்-ரியா.
ஹாய் க்கா.. ஹாய் அணுக்கா ஹாய் அண்ணா....-பூர்வி,சுரேஸ்.

வாம்மா ரியா ... நல்லார்க்கயா?-சரோஜா.

நல்லார்கேன் பாட்டி. நீங்க நல்லார்கிங்களா???-ரியா.

ம் நல்லார்கம்மா...-சரோஜா.

சரி வா பூர்வி மேம் இப்போ ஃபிரியா இருக்காங்க போய் பார்த்துட்டு வரலாம்-அணு.

பின் சரோஜா,பூர்வி ,அணு, ரியா அங்கிருந்து கிளம்பினர்.
போகும் வழியில்,
ஏம்மா ரியா நீ கல்யாணம் பன்னிக்க ஒத்துக்குவே மாட்டிகிறயாமே அந்த கவலயே அம்மாக்கு அதிகமா இருக்கும்மா.... புள்ளைங்களாம் ஏன்தான் இப்படி பன்றிங்களோ???-சரோஜா.

அப்டிலாம் இல்ல பாட்டி எக்ஸாம் முடியட்டும்  பாட்டி..... இன்னும் 3மன்த் இருக்கு... அப்பறம் பேசிக்கலாம்....-ரியா.

சரி என்னமோம்மா... சரோஜா.

பின் அனைவரும் டாக்டர் இருக்கும் அறையினுள் நுழைந்தனர்.
ஹாய் சர்மி மேம்-பூர்வி.
ஹாய் பூர்வி. ஹவ் ஆர் யூ????-சர்மிளா.
யா பைன் மேம்..-பூர்வி.
பின் அனைத்துப் பரிசோதனைக்கு பிறகு குழந்தை ஆரோக்கியமாக இருப்பதை அறிந்த பிறகு அனைவரும் வீடு திரும்பினர்.
ரியாவும் அணுவும் பாரதி அம்மா இருக்கும் அறைக்குச் சென்றனர்.

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now