அடுத்து வந்த நாட்களில்..அவர்கள் நண்பர்களாக மட்டுமே பேசிவந்தனர் என்பதைவிட ஒருவரிடம் மற்றொருவர் அப்படி இருப்பதை போன்று நடித்து வந்தனர்.
ரியாவும் தன் போட்டோவை நவீனுக்கு அனுப்பி வைத்தாள்.
அவளை பற்றி அனைத்தும் அவன் அறிந்திருக்க வேண்டும் என விரும்பினாள்.
இவ்வாறாக நாட்கள் கழிந்தன.
இருவரும் ஒப்புகொள்ளவில்லையே தவிர அவர்களுக்குள் காதல் வளர்ந்துகொண்டுதான் இருந்தது.எப்போது தன்னிலை தவறி உளறிவிடுவோம் என்று அவர்களுக்கு தோன்றுகிறதோ... அப்போது ஏதாவது சண்டை செய்து பேசாமல் விட்டு விடுவர். பின் ஒருவாரத்திலிருந்து ஆறு மாதம்வரைகூட பேசாமல் இருந்ததும் உண்டு.
பின் ஒருவர் பேசிவிட்டால்.. தங்களுக்குள் சண்டை நடந்த தடயமே இல்லை என்ற அளவிற்கு நார்மலாக உரையாடுவர். ரியாவிற்கும் இயல்பாக நவீனை போல பேச பழகித்தான் போனது மனதில் தோன்றினாலும் அதை பற்றி உரையாட மாட்டாள்.
நவீனோ அல்லது ரியாவோ, உன்கிட்ட ஒன்னு சொல்லனும்
என பேச்சை ஆரபித்தால் அன்று கண்டிப்பாக சண்டை நடக்கும்.. ஆனால் அந்த ஒன்று என்னவென்று பகிர்ந்து கொண்டதில்லை...ரியாவிற்கு இது மூன்றாம் வருடம்... வழக்கம் போல இருவரும் பேசாமல்தான் இருந்தனர்.
அவனிடம் பேச வேண்டும் போல் இருந்தது.
ஆனால் இம்முறை சண்டையிட்டு பேசாமல் போனது நவீன்... ஆதலால் அவளுடைய செல்ப் ரெஸ்பெக்ட் அவனிடம் பேச வழிவிடவில்லை.
அவனை எண்ணி ஜன்னல் ஓரம் திரும்பி கண்ணீர் விட்டவளின் கண்களில் பிறை நிலவும் அதனருகில் ஒரு நட்சத்திரமும் இருந்தது தெரிந்தது.
ஏனோ அவள் அன்று சந்திரனிடம், தன் மன எண்ணங்களையும்... அவனிடம் பேசவேண்டும்... அவனாகவே அவளிடம் பேச வேண்டும் ....என்னால் தாங்க முடியவில்லை... இன்றே பேச வேண்டும்... அவர்கள் வாழ்வில் ஒன்றிணையவேண்டும்.... அவள் நவீனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தன் கோரிக்கைகளை நம்பிக்கையுடன் முன் வைத்தாள்.
YOU ARE READING
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
General Fiction"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want...