பகுதி-12

7.2K 190 13
                                    

ரியா அழுது கொண்டிருக்கும் அக்காட்சியை கண்ட விக்கியும் அணுவும்...அவ்விடத்திலேயே திகைத்து நின்றனர்......
அவர்களின் வரவை ரியாவும் கௌதமும் கவனிக்கவில்லை..

பின் ரியா அவனை கட்டி அழுது கொண்டே பேச தொடங்கினாள்..
ஐம் சாரி கௌதம்.... என்னால எதையும் மறக்கமுடியல....அப்படி இருக்கும்போது எப்டி என்னால இன்னோர்த்தர மேரேஜ் பன்னிட்டு அவருக்கு துரோகம் பன்ன முடியும்.....என கேட்டாள்.

எனக்கு தெரியும் ரியா நீ வெளியில மட்டும்தான் நார்மலா இருக்கமாதிரி நடிச்சுகிட்டிருக்கனு..... எப்பயும் சிரிச்சுக்கிட்டே இருக்கறது உன்னோட சின்ன சின்ன குறும்புதனம் எல்லாமே உன்ன விட்டு இந்த 5 வருசமா போயிடுச்சு.....என்ன நினைக்கற நீ .... அப்பப்ப சிரிச்சா.... அப்பப்ப சந்தோசம இருக்க மாதர நடிச்சா நா நம்பிடுவனா.....எல்லாரும் நம்பலாம் பட் உன்னபத்தி எல்லாம் தெரிஞ்ச நா நம்பமாட்டேன்.... பிளீஸ்டா ரியா. எவனோ ஒருத்தனுக்காக நீ இவ்வளவு நாள் இப்படி இருந்ததெல்லாம் போதும்.... ..பி.ஜி. முடிஞ்சா பேசிக்கலானு இருந்தேன் ...நீ என்ன பன்றனு பார்கலானு வெயிட் பன்னேன்.... ஆனா இன்னைக்கு அம்மா அப்படி கஷ்ட படுறத பார்த்ததுகுகப்பறம் என்னால தாங்க முடியல.. நீ இப்படி இருக்க காரணமா இருக்கவன் மட்டும் கையில கெடச்சா அவ்ளோதான்....நீ மூவ் ஆன் ஆகுடா.... பிளீஸ்...
அவனுக்கே நீ இவ்வளவு நாள் உண்மயா இருந்துட்ட... கண்டிப்பா உன்ன கல்யாணம் பன்னிக்க போறவனுக்கு துரோகம் பன்ன மாட்ட... உனக்கு அப்படி பன்னவும் தோனாது. பிளீஸ் டா ரியா எங்க எல்லார்தையும் கொஞ்சம் நெனச்சு பாரு நீ சீக்கரம் முவ்வானாயிடுவ... என அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதை பார்த்து தாங்க முடியாமல் அவள் கண்ணீரை துடைத்து விட்டான்....
பின் ரியா ,கௌதமிடம் எனக்கும் தெரியும் கௌதம் நா மூவ்வான் ஆயிட்டேன், இன்னும் கொஞ்சம் டைம் வேணும் அவ்ளோதான்..... அப்ப நானே ஓகெ சொல்லிடுறேன். என்னால எப்போ என்ன கட்டிக்க போறவன்தான் எல்லாமேனு தோனுதோ அப்போ சொல்றேன்..என்றாள்....
ஹிம் ஓகெ டா இனி எதுக்காகவும் யாருக்காகவும் நீ அழக்கூடாது ஓகெ வா.....எங்க சிரி பார்ப்போம் என கௌதம் கேட்க.... ரியா சிரிக்க ஆரம்பித்தாள் கௌதமிற்காக....

பின் விக்கியும், அணுவும் அவர்கள் அருகில் வந்தனர்.... அதை பார்த்ததும் ரியா கண்களில் மீதம் உள்ள கண்ணீரை துடைத்து நார்மலாக இருப்பதை போல நடித்தாள்......
கௌதமும் ஒன்றும் நடக்காதது போல காட்டிக்கொண்டான்..... ஏதோ கேட்க ஆரம்பிக்க வந்த விக்கியை அணு, மற்ற இருவரும் பார்காதவாறு அவன் கையை பிடித்து வேண்டாம் என்பதை போல தலையசைத்தாள்.....பின் விக்கி அமைதியானான் நாள்வரும் வீட்டினுள் சென்றனர்..... ஏழு மணியளவில் கௌதமும் அணுவும் கிளம்பினர், விக்கியும் வேலையிருப்பதாக கூறி வெளியில் சென்றான்....
வெளியேறியதும் கௌதமிற்கு கால் செய்து அருகில் உள்ள ரெஸ்டாரன்டிற்கு வர சொன்னான்.....
அனைவரும் வந்து ஒரு டேபுளில் அமர்தந்தனர்.....

அண்ணா என்ன நடக்குது இங்க அக்கா ஏன் அப்படி அழுதா???? யார அவளால மறக்க முடியல என வினாவினான்.....-விக்கி.

அதெல்லாம் ஒன்னும் இல்ல விக்கி.... ( விக்கி இவர்கழுக்கு தம்பி என்பதை தாண்டி நல்ல நண்பன்...ரியாவைவிட ஒரு வருடம் சிறியவன்... அனைத்தையுமே இருவரும் பகிர்ந்து கொள்வர்.... வீட்டில் உள்ளவர் மற்றும் வெளியில் உள்ளவர்களுக்கு எப்போதுமே சண்டையிட்டு கொண்டிருக்கும் டிபிக்கல் அக்கா தம்பி....ஆனால் ஒருவர் மீது ஒருவர் அளவுகடந்த அன்பை வைத்துள்ளனர்... மற்றவரிடத்தில் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பர்.....அக்கா மீதுள்ள அன்பில் பாசமலர் சிவாஜியையே தோற்கடித்துவிடுவான்.... ஆனால்எதையும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டான்)
அவ அழவெல்லாம் இல்ல....-கௌதம்.

நிறுத்து கௌதம் நாங்க எல்லாத்தையும் பார்த்துகிட்டுதான் இருந்தோம்....அங்க அப்போதான் ரியா அழுகைய நிறுத்தினா அதான் எதும் கேக்கல... எத மறைக்கனுனு டிரை பன்ற நீ.... ரியா லைப்ல என்ன நடந்தது.....என்கிட்டகூட நீங்க எதும் சொல்லவே இல்ல....இப்போ சொல்லு கௌதம்....-அணு.
ஐம் சாரி .... ரியா யார்டயும் எதுவும் சொல்லகூடாதுனு சொல்லிற்க்கா...
அவளா உங்ககிட்ட சொன்னாதான். அவ ஒருத்தன லவ் பன்னா.... அவன் விட்டுட்டு போய்டான்.... அந்த ராஸ்கல் மட்டும் என் கையில கிடைச்சா அவ்ளோதான்..... அன்ட் அவ மூவ்வான் ஆய்ட்டா.....இவ்வளவுதான் என்னால சொல்லமுடியும்.... அவ இத கடந்து வந்துகிட்டிருக்கா ஸோ மறுபடி அவகிட்ட இதபத்தி எதுவும் கேட்காதிங்க...இத இப்படியே விட்டுடுங்க...ஐம் சாரி அணு முடிஞ்ச விஷயத்த பேச வேண்டாணு நாங்க யார்கிட்டயும் சொல்லல என கூறினான் கௌதம்.
பின் அணுவும் விக்கியும் இதற்கு ஒப்புகொண்டனர். டின்னர் முடித்து அனைவரும் அவரவர் இல்லம் திரும்பினர்....

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now