அடுத்து வந்த நாட்களில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தன.
நவீனுக்கும் ரியாவை தவிற மற்ற அனைத்தையும் கூறினர்.
அவன் முன்பிருந்த வீட்டை புதுபிக்கும் பணி நடைபெற்றிருந்தது.
திருமணம் முடிந்தவுடன் அங்கு செல்வதாக ஏற்பாடு.நிச்சயதார்த்தத்திற்கு இரு நாட்கள் மட்டுமே இருந்தன. புது மாப்பிளை
நவீனிற்கு வீட்டிலிருக்க சலிப்பாகதான் இருந்தது.திருமண வேலைகளை வீட்டினரே பார்த்துக்கொண்டனர்.
திருமண ஏற்பாட்டை பற்றி பேச பாஸ்கர் அழைத்தான்.
நவீன் ஆக்சிடென்ட் ஆனதினால் சில மாதங்கள் டிரைவ் செய்யக்கூடாது என டாக்டர் கூறியதால் அவன் காரை ஓட்டுவதில்லை.
அந்த சமயத்திற்கு ஆபிஸ் வேலைகளை முடித்து லோகேஷ் அங்கு வந்ததால் அவனையும்... ராகுல் அடம்பிடித்ததால் இருவரையும் அழைத்து சென்றான்.
பாஸ்கரிடம் பேசி முடித்ததும் கிழம்ப வெளியில் சென்றபோது ராகுல் மாம்மா ... அங்க... என கேட்டவுடன்
அங்க போலாமா.. சரி..வா லோகேஷ் வீட்டு வேல எவ்ளோ தூரம் நடந்துருக்கு பார்த்துட்டு போயிடலாம் என்றான்.வீட்டினுள் அனைத்து வேலைகளும் முடிந்தது.. வெளி வேலைகளை மட்டுமே செய்து கொண்டிருந்தனர்.
வாட்ச்மேனிடம் சாவி வாங்கி மூவரும் உள்ளே சென்றனர்.
வீட்டில் முன்பு இருந்ததற்கு அடையாளமே இல்லாதிருந்ததைபோல் இருந்தது லோகேசிற்கு. அவர்கள் போட்டோகள்கூட அங்கு இல்லை...
உள்ளே சென்ற நவீன் சுற்றி பார்த்தான். தன் அறை எதுவென யோசித்துகொண்டிருக்கும் வேலையில் ராகுல் மேலே ஓடினான் அவனை பிடிக்க லோகேசும் பின்னே சென்றான்.
அவர்கள் இருவரும் வராததால் மேலே சென்றான். அங்குள்ள அறையில் ராகுலின் சிரிப்புசத்தம் கேட்டு உள்ளே நுழைந்தவன்... அவ்வறையில் நுழைந்ததுமே ஏதோ உணர்ச்சி அவனை ஆட்கொண்டது.
பின் பால்கனியிலிருந்த ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த இருவரிடமும் சென்றான்.
YOU ARE READING
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
פרוזה"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want...