என்ன மட்சியா இப்பொழுது எப்படி இருக்கின்றாய்... என்று கேட்டவாறே அவள் அருகில் அமர்ந்தான்.
அவனிடம் பதில் கூற முடியாமல் தவித்தாள்.
உனக்கு என்ன தான்டி பிரச்சனை... ஒருவேளை நான் தான் உன் பிரச்சனையா? நான் உன் கண்களில் காண்பது காதல் இல்லையா? என்மீது உனக்கு இருக்கும் வெறுப்பினை தான் நான் தவறாக புரிந்து கொண்டேனா? பதில் கூறு மட்சியா.. நீ இப்பொழுது சொல் நான் உன்னைவிட்டு நிரந்தரமாகச் சென்றுவிடுகிறேன். இது உன்மேல் சத்தியம் மா...
அவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் துடித்தாள். நிரந்தரமாக சென்றுவிடுவானா? நிஜமாகவா? நினைக்கும் போதே அவள் நொறுங்கிப் போனாள்.
பதில் கூறு மட்சியா... நீ அமைதியாக இருந்தால் என்னிடம் பேசுவதற்குக் கூட உனக்கு விருப்பம் இல்லை என்றுதானே அர்த்தம்... இதோ இப்பொழுதே உன்னை விட்டுச் சென்றுவிடுகிறேன் என்று அருகில் இருந்து மருத்துவர்கள் பயன்படுத்தும் கத்தியை எடுத்து கை நரம்பினை சட்டென அறுத்தான்.
மதனாவோ அலறிவிட்டாள்.
மட்சியாவோ அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று உறைந்து போனாள்.கைகளில் இரத்தம் நிக்காமல் வரத் தொடங்கியது. இனி உன்னை தொல்லை செய்யமாட்டேன் டா... என்னை மன்னித்துவிடு...
சிவ்..சிவ்.. என்ன இது... ஐ லவ் யூ சிவ்... லவ் யூ ஸோ மச்.... நீ இல்லைனா நான் இல்லை சிவ்.. உங்களை பார்த்த அந்த நிமிடத்தில் இருந்து உங்கள் மீது உயிரையே வைத்திருக்கின்றேன்.
நடப்பது எதுவும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மதனா.
டாக்டர்... டாக்டர். ப்ளீஸ் யாராவது வாங்களேன்... மதனா.. டாக்டரை கூப்பிடுடி... ஐய்யோ இவ்வளவு இரத்தம் வருகின்றதே நான் என்செய்வேன் என்று தன் துப்பட்டாவினால் கட்டு போட்டாள்.
எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றது என தெரியுமா? ஏன் இவ்வளவு நாட்களாய் மறைத்தாய் மட்சியா??
நீ.. நீ முதலில் அமைதியாக இரு சிவ்.. பிறகு இதைப் பற்றியெல்லாம் பேசிக்கொள்ளளாம்.
இனி இப்படியே செத்தாலும் பரவாயில்லைடா... மகிழ்ச்சியாய் உன் மடியில் கண் மூடுவேன்.. என்று சொல்லிக்கொண்டே கண் மூடினான்..
சிவ்னேஷ்..... என்று அலறினாள் மட்சியா..
YOU ARE READING
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
Fantasyகாதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.