அதிர்ச்சியும் ஆனந்தமுமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மட்சியாவின் தந்தை அந்த முதியவரைப் பார்த்து விழித்தார்.
அவரோ கண்ணால் நடப்பது எல்லாம் சரி என்பதைப் போல சைகை செய்தார்.
மட்சியா சிவ்னேஷிடம் கூற ஆரம்பித்தாள்.
அந்த முதியவரைப் பார்த்து இவர் என் அப்பா... என்றாள்.
சிவ்னேஷ் அதிர்ச்சியாய்ப் பார்த்தான்.
என்ன மட்சியா கூறுகிறாய்?? இவர் எப்படி... எனில் இவர்கள் இருவரும்?? என்றான் அவளுடைய தாய், தந்தையைக் காட்டி....இவர்களும் தான்....
அங்கிள்... அங்கிள்... ம..மட்சியாக்கு ஏதோ...
இருங்க சிவ்னேஷ்... அவள் பேசுவதை முழுமையாகக் கேளுங்கள்.
நான் உங்களை ஈஸ்வர் னு கூப்பிட்டேன். ஆனாலும் நீங்க ரெஸ்பான்ஸ் பண்ணீங்க.. ஏன்??
அது.... அப்படியா கூப்பிட்ட?? நான் கவனிக்கலை இந்த டென்சன்ல...
இல்லை சிவ்... அதுதான் உன் நேம்...
மட்சியா என்ன உளறுகிறாய்....
நான் சதி....
ச...சதியா..?
என்னோடு வா... என்று அவன் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.
அந்த வீடு இருந்தத் தெருவின் முனையில் சென்று அங்க பாரு சிவ்.
என்னதுடி..? அங்க எதுவும் இல்லை.
நல்லா பாரு சிவ் என ரோட்டின் அருகில் அழைத்துச் சென்றாள்.
இந்த இடம் உனக்கு நியாபகம் வரவில்லையா??இ...இது.. இங்க....இங்க....
லாரி ஒன்று வேகமாய் வந்தது.... அதன் ஹாரன் சப்தம் இதயத்தைக் கிளித்தது...
மட்சியா சிறிது தள்ளிப்போயி நின்றாள். இப்போது....? எனக் கேட்டாள் சிவ்வைப் பார்த்து.
லாரி அவளை நோக்கி வருவதைக் கண்டு.... சதி...என்று கத்தியவாறே அவளை தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டான். என்னடி செய்கிறாய் நீ.... மறுபடி ஒருமுறை உன்னை இழக்க நான் தயாராய் இல்லை. இல்லை.... உன்னை நான் இழக்க மாட்டேன்.... "நான் இருக்கும் வரை உனக்கு எதுவும் ஆகவிட மாட்டேன்".....
YOU ARE READING
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
Fantasyகாதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.