♥°°♥25....

2.4K 109 33
                                    

        என்னப் பெண் அவள்... பேசிய இரண்டு நிமிடங்களில் மனதைக் கவர்ந்துவிட்டாளே.... அவள் பேச்சினைப் போலவே அவளது தோற்றமும் எவ்வளவு வசீகரமாய் உள்ளது. இளம் வயதில் மற்றவர்களைப் பற்றியும் யோசிக்கிறாளே.... நன்முறையில் வளர்த்து இருக்கின்றனர்.. என்று அவளை எண்ணியவாறே படுத்திருந்தான்.

   அவளும் அப்படித்தான்.... அவனுடைய குணங்களைப் பற்றியே யோசித்து யோசித்து வியந்தாள். தன் வீட்டையே இப்படி மாற்றியிருக்கிறான்? எத்தனை அன்பானாக இருந்திருந்தாள் அந்தப் பெண் இரண்டு மாதத்தில் அவள் பெற்றோரை மறந்து அண்ணா அண்ணா என்று உருகுவாள்??  அவனுடைய குணம், பாசமும் அவளை அவனைத் தாண்டி வேறு எதையும் யோசிக்க விடவில்லை.

     அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்து, மறுநாளே அங்கு சென்றாள். அனைவரிடமும் பழகினாள். வெகு சீக்கிரத்திலேயே எளிதில் அனைவர் மனதிலும் இடம் பிடித்தாள். ஈஸ்வருடன் பேசி சிறு தொழில் ஒன்றை தொடங்கினாள். ஒவ்வொருவரின் குணத்திற்கேற்ப வேலையை பகிர்ந்து கொடுத்தாள். ஆர்வமும் சுறுசுறுப்பும் அதிகம் கொண்டவர்களுக்கு உருவாக்கும் பொறுப்பினைக் கொடுத்தாள். பொறுமையை கையாள்பவர்களுக்கு அந்தப் பொருள்களை பரிசோதித்து அனுப்பும் பொறுப்பினைக் கொடுத்தாள். தீர ஆராயும் குணம் கொண்டவர்களுக்கு சூப்பர் வைஸிங் என ஒவ்வொருவருக்கும் வேலையைப் பகிர்ந்தாள். ஈஸ்வரையும் விட்டுவிடவில்லை.
உங்களுக்கு தான் பிஸ்னஸ் ட்ரிக்ஸ் தெரிந்திருக்குமே, அதனால் நீங்கள் தான் நம் உற்பத்திப் பொருளின் மார்கெட்டிங் மேனேஜர்.

    நானுமா??

   என்ன நானுமா?? எல்லோரும் வேலை செய்றப்போ நீங்கள் மட்டும் சும்மா இருந்தாள் எப்படி?

   ஓ.... நான் சும்மாதான் இருக்கேன்னு முடிவே பண்ணிட்டியா நீ....

      அதெல்லாம் எனக்குத் தெரியாது.நம்ம வீட்டு வேலைல உங்களுக்குனு ஒரு பங்கு வேண்டாமா??

    சரி தாயே.... நீ என்ன வேலைக் கொடுத்தாலும் அப்படியே செய்கிறேன் என்று கை கூப்பிக் கும்பிட்டுச் சிரித்தான்.

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now