பகுதி 2
சென்னை
"ஹலோ ஶ்ரீ எங்கப்பா இருக்க?"ஶ்ரீயின் அன்னை
"ஹலோ ....அம்மா நான் ஏர்போட்லதான் இருக்கேன். டிராபிக்ல மாட்டிக்கிட்டேன். இப்போதான் வந்தேன் மா".என்றான் ஶ்ரீ என்கின்ற ஶ்ரீதரன்
"ஓ... அப்படியா சரிப்பா...."
" என்னமா போன் பண்ணியிருக்கிங்க"
" ஶ்ரீ உனக்கு டிரஸ் ரெடியாகிடுச்சின்னு தம்பிக்கு போன் வந்துச்சி பா........ அதான் தம்பி உனக்கு போன் பண்ணி சொல்ல சொன்னான்".
"ம்......... சரி மா..... பிளைட் வந்துடுச்சு இன்னும் அரை மணி நேரத்துல அவன கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்துடுவேன் ".
"சரிப்பா........... பாத்து வாங்க வைக்கிறேன்".
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தான் கௌஷிக்.சராசரி ஆண்களின் உயரத்திற்கு சற்று கூடுதல் உயரம். அதற்கேற்றார் போல் திடமான உடற்கட்டுடன் சந்தன நிற அகன்ற நெற்றியில் கரு கரு வென அளைந்தாடும் கேசத்தை இடக் கையால் அழுந்த தள்ளும் கம்பிரமான தோற்றத்தில் 32 வயதில் பதின் பெண்களும் காதல் கொள்ளக்கூடிய அழகிய ஆண்மகன். தீர்கமான பார்வையால் எதிராளியை எடைபோடும் பிரபல தொழிலதிபர்.
" ஹாய்..........கௌஷிக் வெல் கம் டு சென்னை "என்று தன் நண்பனை ஆரத்தழுவி வரவேற்றான் ஶ்ரீ.
சிறு புன்னகையை உதிர்த்த கௌஷிக்" டேய் தல்யாண மாப்புள உனக்கு எவ்வளவோ வேலை இருக்கும் நீ ஏன் ரிசீவ் பண்ண வந்த ? நானே வந்திருப்பேன்ல" என்றான்
"இதனால என் வேலை எதுவும் கெட்டு போகல வா போகலாம்". என்று அழுத்தமாக கூறினான் ஶ்ரீ.
பேசிக்கொண்டு காரில் ஏறி வீட்டிற்கு பயணம் மேற்க்கொண்டனர். சென்னை சாலையில் சீறி பாய்ந்த வண்டி சிக்னல் ஒன்றில் நின்றது. இதே போன்ற சிக்னல் ஒன்றில் தான் முதன் முதலாக அவளை பார்த்தான்.
கௌஷிக்கின் மனம் வெளி உலகினை காண சகிக்காமல் கண்களை இறுக்க மூடி காரின் பின் சீட்டில் தலை சாய்த்து தன் மனதை கொள்ளைக் கொண்டவளின் நினைவில் மூழ்கினான். அன்று சென்னையில் கௌஷிக் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்த சமயம் பளார் எனும் அறையும் சப்தம் கேட்டு என்னவென்று திரும்பி பார்த்தவனின் கண்களில் எழில் கொஞ்சும் ரவிவர்மனின் ஓவியம் ஒன்று உயிர் கொண்டு வந்தது போன்று இருந்தவளை கண்டு சிலையாகினான்.
YOU ARE READING
நின் முகம் கண்டேன். (Completed)
General Fictionஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....