பகுதி 16

7.3K 210 46
                                    

Part 16

"மல்லி ...மல்லி... எங்க போன??"லலிதா

"இதோ வந்துட்டேம்மா..." என்றபடி சமையல் அறையிலிருந்து வந்தாள் மல்லி

"இந்தா இந்த பூ ஜாடியில இருக்க பூவ மாத்திட்டு தோட்டத்துல இருந்து முனியன் கொண்டு வந்த பூவ வை.... இதையெல்லாம் சொல்லனுமா ...!!!! இன்னைக்கு வெள்ளிகிழமை அதுவுமில்லாம பொண்ணுபாக்க வர்ராங்க இதான் நீங்க வீட்ட அழகா வச்சிருக்க இலட்சணமா??? வாசல்ல கோலம் போட்டாச்சி அதுக்கு கலர் கொடுக்க சொன்னேனே கொடுத்தையா "லலிதா.

"கொடுத்துட்டேன்மா" என்ற மல்லி மறுபடியும் வாசற்பக்கம் இருந்த பெரிய பாத்திரத்தில் பூவை அலங்காரம் செய்ய சென்றாள்.

மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்த அருணாச்சலத்தை கண்ட லலிதா "என்னங்க இன்னைக்கு எத்தனை மணிக்கு வறேன்னு சொல்லி இருக்காங்க".

"அவங்க வர்ரது இருக்கட்டும் நீ ஏன் இவ்வளவு பரபரப்பா இருக்க" என்றார் கண்டிப்புடன்.

"அட என்னங்க என் பொண்ண பாக்க வர்ரங்க எல்லாம் சரியா இருக்க வேண்டாமா?....
நீங்க என்ன மசமசன்னு நின்னுக்கிட்டு இருக்கிங்க போய் மாப்பிளைக்கு என்ன பிடிக்குமுன்னு கேளுங்க அண்ணாகிட்ட... நானே என் கையால செய்து கொடுக்குறேன்".

"அங்..அப்புறம் எத்தனை பேர் வர்ராங்க எத்தனை மணிக்கு எல்லாம் கேளுங்க.....இன்னும் என்னங்க இங்கயே நின்னு என் வாய பாத்துட்டு இருக்கிங்க "லலிதா

"என்னடி இது.......இப்பதானேடி எல்லாத்தையும் சொல்ற..... நீ சொன்னவுடனே பறக்க எனக்கென்ன ரெக்கையா இருக்கு கொஞ்சம் நிதானதுக்கு வாம்மா இவ்வளவு ஸ்பீடு உடம்புக்கு ஆகாது தாயே என்றார் நக்கல் தோணியில்.

"என்னை எப்பவேனாலும் நக்கலடிக்கலாம் இப்போ கொஞ்சம் நா சொன்னத செய்றிங்களா" என்றார் லலிதா எரிச்சலாக.

"சரி சரி நான் எல்லாத்தையும் கேட்டு சொல்றேன்" என்று போனை எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தவர்."சிவா எழுந்துட்டானாம்மா" என்றார் மனைவியிடம்.

நின் முகம் கண்டேன். (Completed)Where stories live. Discover now