பகுதி 10

8.2K 237 48
                                    

Part 10

பரபரப்பாக சென்ற வார  வேலை நாட்களில்  சனி ஞாயிறு இரு நாட்களும் தன் ஓய்வை எடுத்துக்கொள்ள   வீட்டில் இருந்த வைஷூ அன்று சனிக்கிழமை என்பதால் தன் தாய் வணங்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வரலாம் என்று நினைத்தாள் . கோவிலுக்கு செல்ல மகளுக்கு   வான்நீல நிறத்தில்  பாவாடையும் அதே நிற சோலியில் மெரூன் நிற குந்தன் ஸ்டோன்களுடன் ஜெர்துசி  வேலைபாடுகள் நிறைந்த உடையை அணிவித்து தோல்வரை இருந்த முடியில் பிரென்ச் பின்னலிட்டவள் கண்ணுக்கு மையிட்டு சிறு பொட்டும் வைத்தாள் . பின்பு பெண்ணின் கொழுகொழு கன்னங்களில் முத்தமிட்டு "சூப்பரா இருக்கு.... கலச்சிகாத... அம்மா ரெடியாகி வந்துடுறேன் குல்லு ... ஹால்ல இரு ...பாட்டிய டிஸ்டப் பண்ணாத ஓகே வா" என்றாள்.

"சரிம்மா டிவி பாக்கவா ? இந்த  longskirt வேற தடுக்குது... விளையாட கூட முடியாது".என்று சொல்லி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டது அந்த குட்டி வாண்டு.

"சரி போய் பாரு பாட்டிக்கு முட்டி வலிக்குதாம் அவங்கள கத்த வைக்காத  சரியா" என்று  கூறி அனுப்பினாள்.

தானும் தயாராகி  ஹாலுக்கு வந்தவள்  தலை சாய்த்து அமர்ந்திருந்த அத்தையை காணவும் " அத்த நீங்க டேப்பிளட் போட்டிங்களா ? இப்ப முட்டி வலி எப்படி இருக்கு? என்றாள் " கிழே குனிந்து அவர் முட்டியை நீவி விட்டபடி.

"இப்ப பரவாயில்லைடா நீ கிளம்பிட்டியா ? குழந்தையும் கூட்டிக்கிட்டு போற ...வெயிலுக்குள்ளே திரும்பிடு" என்றார்   உஷா அக்கறையாக.

"சரிங்க  அத்த  சீக்கிரமே வந்துடுவோம் நீங்க அனவசியமா நடக்காம பாத்து இருங்க" என்று கூறியவள் அவள் புக் செய்த கேப் வர உஷாவிடம் கூறிக் கொண்டு தாயும் மகளும் கோவிலுக்கு சென்றனர்.

30 நிமிட பயணத்தில் 300 கேள்விகளை கேட்டு விட்டாள் வானதி "அம்மா இந்த ஊர் வந்து இருக்கிங்களா?... நாம போகப்போற கோவிலுக்கு போய்  இருக்கிங்களா?... எல்லா இடமும் உங்களுக்கு தெரிஞ்சி இருக்கே!!!...அப்போ இங்க தாத்தா பாட்டி கூட வந்திங்களா?...  தனியா வந்திங்களா?...  இங்க தங்கி இருங்கிங்களா?..." (ஆனாலும் சமத்து குட்டி டா நீ உங்க அம்மா என்ன சொல்றான்னு பார்ப்போம் வா)

நின் முகம் கண்டேன். (Completed)Where stories live. Discover now