பகுதி 17

7.3K 224 57
                                    

Part 17

தந்தையும் தன் வருங்கால மாமனாரும் கூறியதால்  கௌஷிக்கை மாடியில்   இருந்த  அறைக்கு அழைத்து சென்றாள். பெரிய விஸ்தாரமாக இருந்த அறையில் பின்புறம் பால்கனியில் காற்று வீசியது. காண்போரை தன் பால் ஈர்க்கும் விதத்தில் பல  வண்ணங்களில் தன் எண்ணங்களை தூரிகையால் கேன்வாசில் வரைந்து சுவற்றில் பொருத்தி தன் கைவண்ணத்தால் அலங்கரித்து இருந்தாள். இதை ஒரு வித பிரம்பிப்புடன் பார்த்திருந்தவனின் விழிகள் கலைகள் கொஞ்சி விளையாடும் அவள் பட்டு விரல்களில் விழுந்து அவள் கரத்தை பற்ற ஆர்வம் கொண்டது.

திரும்பி நின்றிருந்தவளின் இதயம் தனது துடிப்பை அதிகபடுத்தி இருந்தது. அவரை பார்க்க ஏன் இவ்வளவு நடுக்கமா இருக்கு . என்னால நிமிர்ந்து நேருக்கு நேர் அவரோட முகத்த பாக்க முடியலயே என்று மனதிற்குள் புலம்பி கொண்டிருந்தவள். தயக்கத்துடன் "உக்கருங்க" என்று இருக்கையை காட்டினாள்.

அவளின் எண்ண ஓட்டத்தை புரிந்தவன் முதலில் இயல்பாய் பேச்சை ஆரம்பிக்க நினைத்தான். "வாவ் ஆசம்  ரொம்ப அழகா ட்ரா பண்ணி இருக்கிங்க ".

கௌஷிக் கூறியதில் திரும்பி அவன் எதிரே நின்று மெல்லிய சிரிப்புடன் "தேங்க்ஸ்" என்றாள் .

"உட்காருங்க "வைஷ்ணவி

"ம்....நீ... நீங்களும் உட்காருங்க "கௌஷிக்.

இருவரும் அமர்ந்தனர்  படபடவென பேசுபவள் இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கே  தவித்தாள்.

எப்போட உன்கிட்ட தனியா பேச விடுவாங்கன்னு காத்திருந்து வந்தா இப்படி  தரையியே பாத்துகிட்டு இருக்கேயடி செல்லம் என்று மனதில் செல்லமாய் கடிந்தவன் இரு உன்னை பேச வைக்கிறேன் குலாப்

"ஏதாவது கீழே  போடாடுட்டிங்களா?".

"இல்லையே....... ஏன் ?".வைஷ்ணவி

"இல்ல வந்ததுல இருந்து உங்க காலுக்கு அடியில் இருந்து ரொம்ப நேரமா புதையல் தேடுறிங்க அதான் ஹெல்ப் பண்ணலாமுன்னு கேட்டேன்". என்றான் கண்களில் செல்ல குறும்புடன்.

நின் முகம் கண்டேன். (Completed)Where stories live. Discover now