Part 14
"நீ என்னவோ சொல்ற... சொல்றது எல்லாம் நல்லாதான் இருக்கும் இது நடந்தா கண்டிப்பா நானும் ரொம்ப சந்தோஷபடுவேன்" அருணாச்சலம்.
"எல்லாம் நல்லதாவே நடக்கும் நீ இதுக்கு முதல்ல ஓகே சொல்லுடா" விஜயபாஸ்கர்
மொபைலை எடுத்தவர் போட்டோவை அனுப்பி விஜய் "இது என் பொண்ணு.... பேரு வைஷ்ணவி". என்று மகளின் போட்டோவை பார்த்தபடி கூறினார் அருணாச்சலம்.
"என் மருமக எவ்வளவு லட்சணமா அழகா மகாலட்சுமி போலவே இருக்கா ... இந்த பொண்ண என் பையன் வேண்டாமுன்னு சொல்லிடுவானா ??...அப்பா... எப்போ கல்யாணம் வைச்சுக்கலாமுன்னு கேட்பான்!!!..பொண்ணுதான் தயவு பண்ணி என் பையன ஓகே சொல்லனும்". என்றார் விஜயபாஸ்கர் சிரித்தமுகமாக.
அதை கேட்டு சிரித்த அருணாச்சலம்" என் மாப்பிள்ளைக்கு என்னடா குறை ஹேன்சமா இருக்காரு வேற என்னடா வேணும்".
"அப்பாடா... உன் வாயிலருந்து மாப்பிள்ளை என்ற ஒரு வார்த்த வரவழைக்க என் பையனை எவ்வளவு ... டேமேஜ் பண்ண வேண்டியதா இருக்கு" என்று போலியாக சலித்துக் கொண்டார் விஜயபாஸ்கர்.
"சரி சரி என்னை கிண்டல் பண்ணது போதும்.... லலிதாகிட்டயும் கேட்டுட்டு உனக்கு தகவல் சொல்றேன்.."என்றவர் இடைவேளி விட்டு சரிங்களா சம்பந்தி". என்றார் நண்பரின் கைப்பற்றி.
ஹா...ஹா... என்று சிரித்தவர் "சரிங்க சம்பந்தி "என்றார் கிண்டலாக.
இருவரும் பல வருட கதைகளை பேசியதில் மகிழ்ந்தனர்.
மறு நாள் அருணாச்சலம் இந்தியாவிற்கு வருவதாக இருந்தது.
சிவா தந்தையை அழைத்து வர தானே விமானநிலையம் சென்று கொண்டிருந்தான். தந்தையிடம் எப்படி கூறுவது அவர் எப்படி தங்கிக்கொள்வார் என்றேல்லாம் யோசித்து கொண்டே காரில் விமான நிலையத்தை அடைந்தவன் தந்தையின் வரவிற்க்காக காத்திருந்தான்.
தந்தையை கண்டவன் அவரிடம் இருந்து லகேஜை பெற்றுக்கொண்டு கண்களில் வருத்தத்துடன் "வாங்க அப்பா" என்றான்.
YOU ARE READING
நின் முகம் கண்டேன். (Completed)
General Fictionஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....