Part 15
வைஷ்ணவியின் முடிவு தெரியாமல் தன் பிள்ளையிடம் எப்படி கல்யாணபேச்சு எடுப்பது குறித்த சிந்தனையில் உழன்றிருந்தவர். போனில் அருணாச்சலத்திடம் பேசிய பிறகு இரவு மகனின் வருகைக்காக காத்திருந்தார். மனைவி மக்களிடமும் ஒன்றாக விஷயத்தை கூறுவது என்று நினைத்திருந்தார் விஜயபாஸ்கர்.
சோபாவில் அமர்ந்து டீயை குடித்து கொண்டிருந்த கணவரின் அருகில் அமர்ந்த மாதுரி "மம்தா சாய்" என்று இந்தியில் கூறினார். கணவரின் முகம் பார்த்தவர் தான் வந்து அமர்ந்தது கூட தெரியாமல் சிந்தனையில் இருந்தவரை "சுனோ ஜி என்ன ஒரே யோசனையா இருக்கிங்க" என்றார் மாதுரி.
மனைவியின் புறம் திரும்பியவர் சிறிது தாமதித்து "அது ஒன்னும் இல்ல மாது...நைட் டின்னருக்கு சாப்பாடா சப்பாத்தியான்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்" என்றார் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.
கணவர் கூறியதில் முகம் கோண ம்க்கூம்... நான் செய்தாலும் பிடிக்கமாட்டது சவுத் இண்டியன் சமயல்காரன வைச்சாலும் உங்களுக்கு டேஸ்ட் பிடிக்கல உங்க நாக்கு வகை வகையா ருசியா கேக்குது என்று நொடித்தார் மாதூரி.
மாது நீ வைக்கும் குழம்புக்கு நான் இந்த சப்பாத்தியே சாப்பிட்டு போய்டுவேன் என்று கேளியாக கூறியவர் நிறைமாத கர்பிணியாக இருந்த மருமகள் வர " பூஜா கரண் எத்தனை மணிக்கு மா வருவான்" என்றார் ஹிந்தியில்.
"இப்போ வரேன்னு சொல்லி இருக்கிறார் அப்பா" என்றவளை மாதூரி "பூஜா ஜூஸ் குடிச்சியா வா இப்படி வந்து உக்காரு" என்று அருகில் அழைத்து அமர வைத்துக்கொண்டார்.
"ஆமா கிருஷ்ணா எங்க?... டியுஸன் போய்டு வந்தவன் பாக்கவே இல்லையே". அருணாச்சலம்
"அப்பா ஸ்கூல்ல சைன்ஸ் பரோஜக்ட்காக ஒன் வீக் ரொம்ப வோர்க் பண்ணான் இப்போ பிரி ஆகி பிரண்ட்ஸ் கூப்பிட்டாங்கன்னு புட்பால் மேச்க்கு போயிருக்கான்".பூஜா.
"ஹோ... சரி சரி " என்றவர் தனது லேப்டாப்பை திறந்து மெயில்களை செக் செய்து கொண்டிருந்தார்.
YOU ARE READING
நின் முகம் கண்டேன். (Completed)
General Fictionஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....