Part 20
அம்மி மிதித்து அருந்ததியின் முகம் பார்த்து அக்னியை சாட்சியாய் வைத்து இன்று முதல் நீ என்னில் சரி பாதி என்றும் உன்னை விட்டு நீங்கேன் என்று உறுதி எடுத்து அவளின் கைப்பற்றி கொண்டு அக்னியை வலம் வந்தவர்கள் பெற்றவர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர்.
உஷா லலிதாவை பார்த்து அண்ணி நீங்க இங்க பிள்ளைய பாத்துக்கங்க நாங்க வீட்டுக்கு போய் எல்லாத்தையும் ரெடி பண்றோம் . அண்ணன்கிட்ட சொல்லிடுங்க... அவர் என்னை தேடப்போறார் என்றவரிடம் சரி என்றவர் ஒரு நிமிஷம் உஷா இதோ வரேன் என்றார் லலிதா.
மாதுரியிடம் சென்ற லலிதா அண்ணி பூஜாவ பாருங்க ரொம்ப டையர்டா தெரியறா ...வீட்டுக்கு தான் உஷா போராங்க கூட அனுப்பி வைச்சா அங்க போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பா என்றார்.
சரி .....பூஜா நீபோய் ரெஸ்ட் எடு நாங்க சடங்கு முடிச்சிட்டு வந்திடுறோம் என்று இந்தியில் கூறியவரை கணவர் அழைக்க அவரிடம் சென்றார்.
லலிதாவை தயக்கமாய் ஏறிட்ட பூஜாவை கவனித்த லலிதா ஏன் மா ஒருமாதிரியா இருக்க உனக்கு துணையா காயூவ அனுப்பி வைக்கிறேன் நான் சொல்றது உனக்கு புரியுதான்னு தெரியல ம்... என்றவர் யோசனையாக காயூ... காயூ.... என்று அழைத்தார்.
நண்பிகளுடன் செல்பி ஏடுத்து கொண்டிருந்த காயத்ரி லலிதா அழைத்ததில் செல்லை எடுத்துக்கொண்டு ஒரு கையில் பாவடையை பிடித்தபடியே ஒடி வந்தவள் , நண்பன் ஒருவன் தோல்மீது கைபோட்டு பேசியபடியே சென்ற கிர்ஷின் மேல் மோதி கிழே விழுந்தவளின் செல்போன் கிராச் ஆனது . அதை பார்த்த காயூ ஒற்றை கையை ஊண்றி எழுந்து கோபமாக "ஏய் பார்த்து வரமாட்ட தடி மாடு மாதிரி குறுக்க வர?". என்று அதட்டினாள். அவளது அதட்டலில் வெகுண்டு எழுந்தவன்" இத்தனுண்டு சைஸ்ல இருந்துட்டு யாரு வந்து தடிமாடுன்னு சொல்ற மோதினது நீ என்னை திட்ற நியாயமா பாத்த நான்தான் உன்னை திட்டனும் குட்டச்சி
"ஏய் யார பாத்து குட்டச்சின்னு சொல்ற போட நெட்டக்கொக்கு"காயூ.
YOU ARE READING
நின் முகம் கண்டேன். (Completed)
General Fictionஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....