கல்லூரி முடித்து பரிதாவிடம் விடைப்பெற்றவள் தன் ஸ்கூட்டியில் பலவிதமான எண்ணங்கள் மனதை குழப்ப கடந்த காலத்தை பற்றிய எண்ணத்துடனே வீட்டை அடைந்தாள்...
சோர்வோடே உள்ளே ஙழைந்தவளை " அம்மா வந்தாச்சு " என்ற அவள் மழலை செல்வங்களின் குறலே வரவேற்றது...
ஆம் .. சங்கமித்ரா அகில்மித்ரன்.. இரட்டையராய் பிறந்த நான்கு வயது வாண்டுகள்... அம்மாவின் மனக்கவலைக்கு ஆறுதலாய் இருக்கும் அழகு செல்லங்கள்...
அதில் புத்துணர்ச்சியாய் உணர்ந்தவள்... " ஐய்...என்னோடு குட்டிமாவும் பப்புகுட்டியும் இவ்வளவு சந்தோசமா இருக்கிங்களே .. " என ஆசையாய் அணைத்து முத்துமிட்டவளை குழந்தைகளும் அவள் கண்ணங்களில் மாறி மாறி தன் இதழ் பதிக்க .. அதில் ஒரு நிமிடம் சந்தோசத்தோடு சேர்ந்து இவர்களுக்காக தானே வாழ்கிறோம் என்ற வலியில் கண் கலங்கியவள் அதை அவர்கள் காணா வண்ணம் மறைத்த இனியா...
"எங்கடா அம்மம்மா காணோம்" என்றதை
கேட்டு வெளியே வந்த அவள் அம்மா சுந்தரி... " வாடா இனிக்குட்டி .. போய் ப்ரஸ் ஆகிட்டு வா ... வந்தோனே இந்த வாண்டுகளோட விளையாட ஆரம்பித்து விடாதே" என அறிவுரை வழங்க...
"மா.. நான் என்ன சின்ன பிள்ளையாமா" என சிரித்து கொண்டே கேட்டாள்
"எல்லாம் அம்மாக்களுக்கும் எவ்வளவு வயசானாலும் தன் பிள்ளைகள் சின்ன பிள்ளைகள் தான் அது உனக்கே போக போக தெரியும்" என்றவளை ஆமோதிப்பதாய்
"அதும் கரெக்ட் தான் ... நான் போய் ப்ரஸ் ஆகிட்டு வரேன் மா" என்று சென்ற இனியாவை பார்த்தவள்
.. என் பிள்ளைக்கு மட்டும் எவ்வளவு கஷ்டம் என்று நினைத்து பெருமூச்சுவிட்டவாறு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்....
ப்ரஸ் ஆகி வந்தவள் தன் மழலைகள் இரண்டும் அமைதியாக உட்கார்ந்து இருப்பதை கண்டவள் சிரித்துக் கொண்டே ..
"என்ன என் பட்டூஸ் இரண்டு பேரும் இவ்வளவு சமத்தா இருக்கிங்களே .. என்ன வேணும் உங்களுக்கு.. " என தன் பிள்ளைகள் மனதை உணர்ந்தவளாய் கேள்வி எழுப்ப ...
![](https://img.wattpad.com/cover/159886418-288-k179220.jpg)
YOU ARE READING
நினைவே நனவாகிவிடுவாயா
Non-Fictionஹாய் நட்புகளே!!!!! என்னுடைய இரண்டாவது கதையோடு சந்திக்க வந்துவிட்டேன் செல்லம்ஸ்!!!!! முதலாவது கதைக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு ஆரம்பிக்க போகிறேன்