விடாமல் துரத்துராளே!! 8

1.3K 59 2
                                    

விடாமல் துரத்துராளே 8

தியாமா அவர் சொல்ற மாதிரி ஏன் இப்படி லூசு மாதிரி பிகேவ் பண்ற என்றபடி தியா பின்னாடியே ஹரிணி வர,

அவள் கூறியது எல்லாம் காதில் வாங்காத தியா ஹரிணி கையில் இருந்த ஸ்கூட்டி சாவியை பிடுங்கி அங்கு நிறுத்தி வைத்து இருந்த வண்டியை ஸ்டார்ட் செய்தாள்...

ஹரிணி பின் சீட்டில் ஏறும் முன்னே,

தியா, நான் பேசிட்டே இருக்கேன், ஒன்னும் சொல்லமா போனா எனக்கு என்ன மரியாதை இருக்கு, உங்களை இன்னைக்கு விடமாட்டேன் பாவா என்று பொறுமியபடி தேவா கார் சென்ற  திசையில் வண்டியை செலுத்தினாள்...

ஏய் ஏய் லூசு வண்டியை நிறுத்துடி, என்ன விட்டுட்டு எங்கடி போற, என்று ஹரிணி பின்னாலே ஓடி வர தியா அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் வேகமாக சென்றாள்…

தேவா காரில் படு பயங்கரமாக சென்றான்… அடப்பாவி பாவா காரை ஓட்ட சொன்னா நீங்க என்ன ஃப்ளைட் ஓட்ற மாதிரி இவ்வளோ வேகமா போறீங்க… தியா விடாதா இன்னைக்கு அந்த லேண்ட் ரோவர் காரா, இல்ல இந்த ஸ்கூட்டி பெப்பா பார்த்துக்கலாம் ஒரு கை, ஆக்ஸ்லேட்டரை முறுக்கி ஜெட் வேகத்தில் போ நீ ஒரு சிங்க பெண் என்றவள்,  ஆண்டவா புயல் வேகத்தில போய்ட்டு இருக்கேன் குறுக்க எதுவும் மணல் லாரி வரமால் உன் புள்ளையை நீதான் காப்பதனுப்பா  என்று கடவுளுக்கு ஒரு வேண்டுதலை வைகை புயல் பாணியில் வைத்து விட்டு தேவா காரை துரத்தினாள் தியா….

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

திவேஷ் வெண்ணிலா வீடு:

காரில் இருந்து இறங்கிய வெண்ணிலா கோவமாக செருப்பை கழற்றி வீசிவிட்டு  வீட்டுக்குள் சென்று அங்கு இருந்த பொருட்களை எல்லாம் கீழே தள்ளி விட்டு ஷோபாவில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தாள்...

அவள் பின்னேயே காரை பார்க் செய்து விட்டு வந்த திவேஷ் அவன் மனைவி கோவமாக உள்ளாள் என்பதும் எதனால் கோவமாக இருக்கிறாள் என்பதும் தெரியும்…

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now