விடாமல் துரத்துராளே!! 9

1.5K 52 9
                                    

விடாமல் துரத்துராளே 9

இரவு யமுனா டைனிங் டேபிளிலில் உணவு பதார்த்தங்களை அடுக்கி வைத்து கொண்டு இருந்தார். அவரது கணவர் பாலகிருஷ்ணன் சாப்பிட வந்து அமர்ந்தவர், தியா குட்டி எங்க யமுனா என்று கேட்டார்...

அவ ரூம்ல இருக்கா…

என்னது ரூம்ல இருக்காளா, என் கார் சத்தம் கேட்டாலே போதும் டாடி சொல்லி என் பொண்ணு ஓடி வருவா, இப்ப நான் வந்து ஓன் ஹவருக்கு மேல் ஆக போகுது… நான் வந்ததில் இருந்து பார்க்கிறேன் ஆளையே காணோம்… நீ ஏதாவது என் பொண்ணை  தீட்டுனயா? நான் போய் என் பொண்ணை பார்த்ததுட்டு வரேன் என்று எழுந்தார்...

அட சாப்பிட உட்கார்ந்துட்டு எழுந்திருக்க கூடாது உட்காருங்க… உங்க பொண்ணை நான் எதுவும் சொல்லலை  ரூம்ல உட்கார்ந்து படிச்சிட்டு இருக்கா.. அதான் நீங்க வந்தது கூட தெரியலை… நீங்க இருங்க நான் போய் கூப்பிட்டு வரேன் என்று யமுனா மாடிப்படிகளில் ஏறினார்… அவருக்கு ஒரே யோசனை தியா மாலை வீட்டுக்கு வரும்போதே முகம் வாடி போய் தான் வந்தாள்… அவளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் யமுனா செய்து கொண்டு போய் கொடுத்த போது கூட வேண்டாம் என்று கூறி அறைக்குள் போய் அடைந்து கொண்டாள்…  ஹரிணியிடம் கால் செய்து இருவருக்கும் ஏதாவது சண்டையா, இல்லை வேறு ஏதாவது பிரச்சனையா என்று கேட்க அவள் அப்படி எதுவும் இல்லை என்று கூறி விட்டாள்... ஒரு நாளும் அவளை இப்படி அவர் பார்த்தது கிடையாது… எப்போதும் சிரித்து கொண்டே இருக்கும் மகள் வாட்டத்துக்கு என்ன காரணம் என்று விசாரித்த போது ஒன்னும் இல்லை என்று கூறி ஏதேதோ கூறி சமாளித்து விட்டாள்…

அறைக்குள் இருந்த தியாவோ பயங்கரமான குழப்பத்திலும் கவலையிலும் இருந்தாள்… அவளின் எண்ணம் முழுவதையும் எப்போதும் போல் தேவாவே ஆக்கிரமித்து இருந்தான்… இன்று மாலில் நடந்த விஷயங்களை பற்றியே யோசித்து கொண்டு இருந்தாள்…

ஃபுட் கோர்ட்

தேவா தியா கேட்ட அனைத்து ஐட்டங்களையும் வாங்கி கொடுத்து விட்டு அவள் முன்பு அமர்ந்து இருந்தான்… சாப்பிட வாங்கி கொடு என்று உரிமையாக கேட்டவளை கண்டு கொள்ளாமல் செல்ல அவனுக்கு மனம் வரவில்லை… அது தவறு என்பதாலும்,

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now