விடாமல் துரத்துராளே!! 11

1.2K 57 5
                                    

விடாமல் துரத்துராளே 11

தேவா எதையோ டைப் செய்வது தெரிய தியா முகம் பிரகாசத்தில் மின்னியது. ஆனால் பத்து நிமிடங்கள் ஆகியும் பதில் ஏதும் வரவில்லை. என்னடா இது என்று நொந்தவள் அவளே தேவாவிற்கு போன் செய்தால்,

தியாவை திட்டி வேகமாக மெசேஜ் டைப் செய்தவன் அதை அனுப்பவில்லை. இப்போது திட்டினாலும் பிரயோசனமில்லை. தியா அடங்கமாட்டாள். தன் மீது அவளுக்கு ஒரு சின்ன ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதுவே அவளை தன்னிடம் இவ்வாறு நடந்து கொள்ள செய்கிறது. அந்த ஈர்பை முளையிலே கிள்ளி எறிய வேண்டும். அதற்கு ஏதாவது செய்ய வேண்டும். திட்டி பயனில்லை என்று டைப் செய்தை மெசேஜை டெலிட் செய்து விட்டு யோசிக்க ஆரம்பித்தான்.

சூர்யா, என்னடா என்ன நடக்குது இங்க என்று கேட்க தேவா அவனிடம் தியாவை அன்று தன் வீட்டில் பார்த்ததில் இருந்து நேற்று மாலில் நடந்த வரை கூறியவன் தியாவை தன்னிடம் இருந்து விலக்கி வைக்க என்ன செய்யலாம் என்றும் கேட்டான். தேவா சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்ட சூர்யா வாவ் எவ்ளோ சூப்பரான இண்டர்ஸ்டிங்கான கேரெக்டர் இந்த பொண்ணையாட இரிட்டேங் கேரெக்டனு சொன்ன லூசு பயலே. அய்யோ பொண்ணு பொண்ணு எவ்ளோ நேரம் சொல்றது பேர் என்னனு சொல்டா என்று கேட்க,

எனக்கு பேர் எல்லாம் தெரியாது ஏதோ சொன்னுச்சு நியாபகம் இல்ல என்றான் தனது நெற்றியை நீவியபடி,

போன் நம்பர் கொடுக்கிற அளவுக்கு க்ளோஸ்ஸா பழகி இருக்க ஆனா பேர் மட்டும் தெரியாத என்ன பாவா நீ என்று சூர்யா நக்கலடிக்க. தேவா தன் அருகே இருந்த பொருளை அவன் மேல் தூக்கி எறிந்தான். அதிலிருந்து லாவகமாக தப்பிய சூர்யா நம்ம ரெண்டு பேரும் அப்புறம் கொஞ்சிக்கலாம் பர்ஸ்ட் போன் அட்டன் பண்ணி பேசுடா அந்த பொண்ணுக்கு உன் மேல் எவ்ளோ அன்பு அக்கறை  இருந்தா நம்பர் கண்டுபிடிச்சு இத்தனை தடவை கால் பண்ணி மெசேஜ் பண்ணும் அதற்கு கொஞ்சுமாச்சும் ரெஸ்பான்ஸ் பண்ணு தேவா என்று கூறினான்.

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now