விடாமல் துரத்துராளே 14

1.2K 55 11
                                    

விடாமல் துரத்துராளே 14

திவேஷ் கோவமாக அந்த வீட்டிற்குள் வந்தான். அங்கு நடு ஹாலில் அமர்ந்து இருந்த செந்திலை பார்த்தவனின் கோவம் இன்னும் அதிகமானது.. திவேஷை பார்த்த அவரோ வாப்பா திவா என்று இன்முகத்துடன் வரவேற்க, அவர் அருகில் வந்த திவேஷ் பேச ஆரம்பிக்கும் போது,

ஹாய் திவா அண்ணா எப்படி இருக்கீங்க. எங்களை எல்லாம் மறந்தீட்டிங்களா,  இப்ப எல்லாம் இந்த பக்கம் வரதே இல்ல.  என்றபடி அவன் அருகில் வந்தாள் செளதாமினி செந்திலின் மகள்.‌

நல்லா இருக்கேன் செளமி .‌கொஞ்சம் வேலைடா அதான் வர முடியலை. நீ எப்படி இருக்கும்மா? எங்க வெளிய போறியா?

ஆமா அண்ணா நெக்ஸ்ட் வீக் எக்ஸாம் இருக்கு ப்ரெண்ட் வீட்டுக்கு போய் படிக்க  போறேன். பாய் அண்ணா என்றபடி திவேஷிடம் தன் தந்தையிடமும் சொல்லி விட்டு கிளம்பினாள்.

செளதாமினி வாசலை கடக்கும் வரை பொறுமையாக இருந்த திவேஷ். அதன் பின்பு கோவமாக செந்திலின் புறம் திரும்பி,

அப்பா உங்களுக்கு என்னாச்சு? ஏன் இப்படி ஒரு வேலை பண்ணுனீங்க?

திவேஷ் அவ்வாறு கேட்டதும் அதிர்ந்து போன செந்தில் இவனுக்கு எப்படி தெரிஞ்சுது என்று மனதுக்குள் அதிர்ந்தாலும், தன்னை வெகு சிரமப்பட்டு இயல்பாக காட்டி கொண்டு நான் என்னப்பா பண்ணுனேன். நீ எதை பத்தி என்கிட்ட கேட்கிற ஒன்னும் புரியலையேப்பா என்றார் செந்தில்.

ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்காதீங்கப்பா நீங்க யார் கிட்ட சொல்லி இந்த ரவுடிகளை ஏற்பாடு பண்ணீனுங்களோ, அவனே என்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டான்.

உங்களுக்கு என்ன பைத்தியமா. தேவா கொலை பண்ண முயற்சி பண்ணி இருக்கீங்க. ஏதோ சப்பையா நாலு ரவுடிகளை ஏற்பாடு பண்ணுனா தேவாவை கொன்னுடலாம் அப்படிங்கிற நினைப்போ, தேவாவிற்கு அந்த ரவுடிங்க  எல்லாம் தூசு மாதிரி தட்டி விட்டு போயிட்டே இருப்பான்.

அந்த சின்ன பொண்ணு மட்டும் இடையில் வரலைன்னா இப்ப அந்த தேவா உயிரோட இருந்திருக்க மாட்டான். மொத்த ப்ளானையும் அந்த பொண்ணு தான் கெடுத்து விட்டு தேவாவை காப்பாத்திருச்சு என்றவரின் கோவம் இப்போது தியா மேல் இருந்தது.

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now