விடாமல் துரத்துராளே 27

1.6K 62 17
                                    

விடாமல் துரத்துராளே 27

தேவா வீட்டில் இருந்து கோவமாக கிளம்பிய சூர்யா அதே கோவத்துடனே காரை இயக்கி வீடு வந்து சேர்ந்தான்…
இந்நேரத்தில் வீட்டில் இருக்கும் யாரையும் தொந்தரவு செய்ய கூடாது என்று தன்னிடம் இருக்கும் சாவியை கொண்டு கதவை சத்தமில்லாமல் திறந்து அறைக்கு வந்தவன் அங்கு உறங்கி கொண்டு இருந்த அவனின் மனைவி ஷோபனா மகன் தேவ் தர்ஷன் உறக்கம் கலையாதவாறு மெத்தையில் படுக்க,

என்ன சார் மாமா வேலை எல்லாம் சிறப்பா முடிஞ்சுதா என்ற மனைவியின் நக்கலாக வினவ, ஷோபா நான் பயங்கர டென்சல இருக்கேன்  பேசாமா படுத்திரு அதான் நல்லது...

ஆனால் ஷோபனா அமைதியாக விடுவதாக இல்லை… இப்ப தான் அங்க நடந்த கூத்த மஞ்சுக்கா போன் பண்ணி சொன்னாங்க… டாக்டர்ன்னு சொல்லி என்னை கல்யாணம் பண்ண… ஆனா இப்ப ப்ரோக்கர் வேலை பார்த்துட்டு இருக்க அசிங்கமா இல்ல… அந்த தியா சின்ன பொண்ணு என்னென்ன சொல்லி ஏமாத்தினானோ உன் ப்ரெண்ட், அதுக்கு நீயும் உடந்தையா இருக்காயா, இதே உன் தங்கச்சியா இருந்தா இப்படி என்று சொல்லி முடிக்கும் முன் அறைந்து இருந்தான் சூர்யா…

என்னடி ஆளு ஆளாக்கு உன் கூடப் பொறந்த தங்கச்சியா இருந்த இப்புடி பண்ணுவியான்னு கேட்குறீங்க...‌தியா வெண்ணிலாவுக்கு மேல்ல தான்டி என் மனசில்ல வச்சு இருக்கேன்… அவளுக்கு இப்ப என்னடி அநியாயம் பண்ணிட்டேன் சொல்றீங்க… அவ ஆசைப்பட்ட வாழ்க்கை ஒரு அண்ணாண அவளுக்கு அமைச்சு கொடுத்து இருக்கேன்… இதுல்ல அசிங்கப்படுறதுக்கு என்னடி இருக்கு… அவ வாழ்க்கை நல்லா இருக்கும்… என் ப்ரெண்ட் தேவா அவளை தங்கமா தாங்க போறான்… நீங்க எல்லாம் வயிறு எரிய தான் போறீங்க…

அப்புறம் என்ன சொன்ன மாமா வேலை பாக்குறான்னா, உன்னை லவ் பண்ற காலத்துல உங்க வீட்டுக்கு தெரியாமா நம்ம இரண்டு பேரும் மீட் பண்ணி பேசும் போது, நமக்காக வாசல்ல வெளிய வெயிட் பண்ணிட்டு தேவா உனக்கும் எனக்கும் காவல் காத்துட்டு மணிக்கணக்காக நிற்கலை… அவனுக்காக என் ப்ரெண்ட்க்காக நான் ப்ரோக்கர் வேலை மாமா வேலைன்னு எல்லாமே பார்ப்பேன்டி, இஷ்டம் இருந்தா என் கூட இரு, இல்லைன்னா கிளம்பி உன் அப்பன் வீட்டுக்கு போ என்று கத்தி விட்டு படுத்து விட்டான்...

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now