விடாமல் துரத்துராளே 16

1.2K 44 6
                                    

விடாமல் துரத்துராளே 16

என்ன கண்ணா என்ன குழப்பம் என்று தன் எதிரே அமர்ந்து இருந்த தேவாவை பார்த்து கேட்டார் மகேஸ்வரன்.

தன் முகத்தை பார்த்தை தன் மனநிலையை சொல்லும் மாமாவை பார்க்கையில் தேவாவிற்கு ஆச்சரியமும் பெருமையும் ஒரு சேர உண்டானது. நண்பனின் தங்கை மீது தனக்கு உண்டான காதல் சரியோ தவறோ என்ற தன் குழப்பத்தை அவரிடம் கூற,

இதுல என்ன கண்ணா இருக்கு இது தப்பே கிடையாது. நான் உன் அப்பாவுக்கு கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடி எத்தனை நாள் நினைச்சிருக்கேன் தெரியுமா? எனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தா என் மச்சானுக்கே கட்டி வச்சிருப்பேன் அப்புடின்னு, உன் அப்பாவுக்கும் அதே எண்ணம் தான். ஆனா பாரு எங்க இரண்டு பேருக்குமே தங்கச்சி இல்லை. அதனால் தான் இப்ப கார்த்திக் இந்துமதிக்கு கல்யாணம் பண்ணி சம்பந்தியாவது ஆகனும் நினைக்கிறோம். நீ உன்னை குழப்பிக்கிற அளவு எல்லாம் இது அவ்ளோ பெரிய பிரச்சினை இல்லை கண்ணா என்று மகேஸ்வரன் கூறினார்.

தேவா, நம்ம வீட்டு கதை வேற மாமா. ஒரு வேளை சூர்யாவுக்கு நாளைக்கு நான் வெண்ணிலா வை லவ் பண்றது தெரிஞ்சா இதை எப்படி எடுத்துப்பானோன்னு யோசனையா இருக்கு‌… உன்னோட ஃப்ரெண்ட்ஷிப்பே வேண்டாம் சொல்லி போய்ருவான்னோன்னு பயமா இருக்கு  என்று மேலும் குழம்ப,

சூர்யா உனக்காக உயிரையே கொடுப்பான். தங்கச்சியை கொடுக்க மாட்டானா? என்ன இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷம் தான் படுவான். அவன் தங்கச்சிக்கு இப்படி ஒரு அச்சு வெல்லகட்டி மாப்பிள்ளை வேற எங்க தேடினாலும் கிடைக்காது என்று மகேஸ்வரன் கூற சரி என்று விட்டு தேவா அங்கிருந்து கிளம்பினாலும் அவன் குழப்பம் இன்னும் முழுவதும் தீரவில்லை என்பது மகேஸ்வரனுக்கு நன்றாக புரிந்தது.

அப்போது தான் தேவா அண்ணா ஜெயேந்திரனுக்கு வரன் தேடி கொண்டு இருந்தனர். மகேஸ்வரன் நேரடியாக வேதாசலத்திடம் சென்று ஜெயேந்திரனுக்கு நம்ம சூர்யாவோட அக்கா மஞ்சுளாவை பேசி முடிக்கலாம் என்று யோசனையை கூற தேவா தந்தைக்கும் சூர்யாவை பற்றியூம் அவன் குடும்பத்தலுள்ளவர்களை நன்கு தெரியும் என்பதால் மகேஸ்வரனின் இந்த யோசனை பிடித்து போக அன்று மாலையே மஞ்சுவை பெண் கேட்டு சூர்யா வீட்டிற்கு சென்றனர். சூர்யாவின்  தந்தை இப்போது இல்லை தாய் மட்டுமே. அவர் முதலில் தயங்கினாலும் பிறகு ஒப்பு கொண்டார். மஞ்சுளா, ஜெயேந்திரனிடம் சம்பந்தம் கேட்க, அவர்களும் தங்களுக்கு முழு சம்மதம் என தெரிவிக்க. அடுத்த முகூர்த்தத்திலே அவர்கள் திருமணம் நடந்தேறியது.

விடாமல் துரத்துராளே!!Where stories live. Discover now