விடாமல் துரத்துராளே 24
தேவா அடித்ததில் ஷோபாவில் தியா விழந்தவள்,
கன்னத்தை பிடித்து கொண்டு ஆ……. என்று வலியில் முனக,
அவள் பக்கத்தில் ஏற்கெனவே அடி வாங்கி விழுந்திருந்த சூர்யாவுக்கு தியாவின் முகத்தில் வலியின் சாயல் தெரிய தேவா மீது பயங்கர கோவம் எழுந்தது அந்த பாசக்கார அண்ணனுக்கு..
சூர்யாவிற்கும் தியாவிற்கும் தேவாவை வைத்து தான் பழக்கம் ஆனது. ஆனால் இந்த குறுகிய காலத்திலே இருவரும் பாசமலரில் ஆரம்பித்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் அண்ணன் தங்கச்சியை மிஞ்சும் அளவுக்கு அப்படியோரு பாசம் இருவருக்குள்ளும், சூர்யா தியா வை பாப்பு என்றும் தியா சூர்யாவை டேய் அண்ணாத்த என்று அழைக்கும் அளவு ஒரு பாசம்..
கோவமாக ஷோபாவில் இருந்து எழுந்த சூர்யா டேய் இப்ப எதுக்குடா பாப்புவ அடிக்கிற, இன்னோரு தடவை என் பாப்பு மேல்ல கையை வச்சா அவ்ளோ தான் என்று எச்சரிக்க… இப்போது சூர்யாவை தேவாவை விட தியாவே அதிகம் முறைத்தாள்…
அய்யோ இவன் வேற தங்கச்சி பாசத்துல டி.ஆர் மிஞ்சிருவா போலேயே, இந்த டயலாக் கை திரும்ப திரும்ப சொல்லி எக்ஸ்ட்ரா அடி வாங்கி கொடுக்குறானே.. இவனை அண்ணாண தத்தெடுத்தது ரொம்ப ரொம்ப தப்பு போலேயே என்று தியா மனதிற்குள் சூர்யாவை திட்டி கொண்டு இருக்க,
சூர்யா கன்னத்தில் தேவா மறுபடியும் அறையை வைத்து இருந்தான்… அதை பார்த்த தியா மறுபடியும் சிரிக்க, தேவா மறுபடியும் அவளை அடிக்க, சூர்யா மறுபடியும் எழுந்து அதே டயலாக் பேசி மறுபடியும் அடி வாங்க, தியா மறுபடியும் சிரிக்க அவளை தேவா அடிக்க ரீப்பீட்டு,
சூர்யா அடி வாங்க, தியா சிரிக்க, தேவா அறைய, சூர்யா அடி வாங்க, தியா சிரிக்க, தேவா அறைய ரீப்பீட்டு,
( இவங்க இப்புடி அடிச்சு அடிச்சு விளையாடிட்டு இருக்கட்டும்.. நாம அப்புடியே காலச்சக்கரத்தை இரண்டு மாசம் முன்னோக்கி நகர்த்தி, இவங்க வாழ்க்கையில் என்ன நடந்தது. எப்புடி கல்யாணம் ஆச்சு.. எதுக்கு இப்புடி அண்ணனும் தங்கச்சியும் போட்டி போட்டு அடி வாங்குறாங்க அப்புடிங்கிற கதையை பார்த்ததுட்டு வரலாம்..)
ČTEŠ
விடாமல் துரத்துராளே!!
Romanceதிருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...