மாஷா அல்லா

2.6K 133 11
                                    

ஹரூஷ் என்ன ஆற்று??? என்று அனைவரும் பதற்றமாக கேட்டார்கள். அவன் பதில் கூறாமல் ஹம்சியை பார்த்துக்கொண்டு இருந்தான். ஹரூஷ் என்று மீண்டும் அழைத்ததும் அவன் "என்னை மன்னித்துவிடுங்கள் என் கை தவறி தட்டை கீழே போட்டுவிட்டேன்".

"பரவாயில்லை ஹரூஷ் என்று கூறிவிட்டு ஹம்சி அந்த பழங்களை எடுத்து தட்டில் வைத்தாள். ஹரூஷ் அமைதியாக ,சிவாவின் அருகில் சென்று அமர்ந்தான். திரைப்படம் முடிந்ததும் அனைவரும் டிவி அறையிலே தூங்க முடிவு எடுத்தனர். "ஹம்சி, மாலதி, பூஜா மூவறும் கிழக்கு திசையில் தலை வைத்து படுத்தனர். ஹரூஷ் , சிவா இருவரும் மேற்கு திசையில் தலை வைத்து படுத்தார்கள். வெகு நேரத்திற்கு பின் அனைவரும் உறங்கினர். நல்லிரவு 3:15 மணி அளவில் சட்டென ஹம்சி கண் விழித்தாள். மெல்ல எழுந்து தண்ணீர் குடிக்க சமையல் அறை சென்றாள். தண்ணீர் குடித்து திரும்பியதும் சமையல் அறை வாசலில் ஹரூஷ் நிர்பதை கண்டு திடுக்கிட்டாள்.

"ஹரூஷ் நான் பயந்துடேன்".

"ஹம்சி நீ எழுந்து போனத பார்த்தேன் அதனால் பின் தொடர்ந்து வந்தேன்.

"வா போய் உறங்கலாம்... என ஹம்சி அழைத்து சென்றாள். வெகு நேரம் ஆன பின்பும் ஹம்சியால் உறங்க இயலவில்லை. மீண்டும் எழுந்து வாசல் கதவை திறந்தாள்.

"ஹம்சி இந்த நேரத்தில் எங்கு செல்கிறாய் என்று கேட்டுக்கொண்டே அவளை பின் தொடர்ந்தான் ஹரூஷ்.

"எனக்கு தூக்கம் வரவில்லை ஹரூஷ் அதனால் வெளியில் சென்று காற்று வாங்க போகிறேன். என்று ஹம்சி பதில் அளித்தாள்.

"இருவரும் சென்று வீட்டின் வாசலில் அமர்ந்தார்கள்.

"ஹரூஷ் நீ போய் தூங்கு". என ஹம்சி கூறினாள்.

"இல்ல ஹம்சி எனக்கும் தூக்கம் வரவில்லை. என்று பதில் தந்தான் ஹரூஷ்.

"ஹரூஷ் ஒரு பெண் அலரும் சத்தம் கேட்டது இல்ல? என்னவாக இருக்கும்??? என்று ஹம்சி கேட்டால்.

"எனக்கு தெரியல ஹம்சி... என்று குழப்பமாக பதில் அளித்தான் ஹரூஷ்.

ஹாசினிWhere stories live. Discover now