தீ

2.2K 119 41
                                    

ஹம்சி கீழே ஓடி வருவதை கண்டு அனைவரும் திகைத்தனர். ஹாரூஷ் வேகமாக அவள் அருகில் சென்றான்.

"ஹம்சி என்ன ஆயிற்று?" என்று வினவினான்.

"ஹாரூஷ் ஹாசினி "என்று ஹம்சி புலம்பினால்.

"யாரு ஹாசினி?" என்று அனைவரும் அவளை கேட்டார்கள்.

"ஹாசினி.....ஹாசினி என் அக்கா." என்று ஹம்சி கூறினாள். பின் அவள் அழுக தொடங்கினால்.

"ஹம்சி அதுக்கு எதுக்கு அழுகுற?" என்று சிவா கேட்டான்.

"அவள நான் இப்போ பார்த்தேன்." என்று ஹம்சி கூறினாள்.

"இப்போவா? எங்க?" என்று பூஜா  கேட்டாள்.

"இங்க உங்க கூட விளையாடிக்கொண்டிருந்தாள் " என்று ஹம்சி கூறினாள்.

"என்ன சொல்கிறாய் ஹம்சி? இங்க நாங்க மட்டும் தான் இருக்கிறோம்" என்று சிவா கூறினான்.

"இல்ல அவ உங்க கூட விளையாடிட்டு இருந்தத நான் பார்த்தேன்." என்று ஹம்சி கூறினால்.

"ஹம்சி அப்படி யாராது இருந்து இருந்தா எங்களுக்கு தெரியாமல் இருக்காது. இங்கு விளையாடிக்கொண்டிருந்தவள் எங்கு சென்றுவிடுவாள்?" என்று பூஜா கேட்டால்.

"ஹம்சி உணக்கு ஒரு அக்கா இருப்பதை நீ எங்களிடம் கூறவேல்லை." என்று ஹாரூஷ் கேட்டான். அதை கேட்டதும் ஹம்சி பயந்தாள்.

"ஹாரூஷ் அது வந்து." என்று ஹம்சி பேச தொடங்கியதும் உள்ளே இருந்த அலரும் சத்தம் கேட்க அனைவரும் உள்ளே ஓடினார்கள். அங்கு கதிர் இருந்த அறை தீப்பிடித்து எரிந்துக்கொண்டு இருந்தது. என்னை காப்பாற்றுங்கள் என்று நெருப்பின் நடுவில் இருந்து கதிர் கத்தினான். அவனை காப்பாற்ற அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் ஓடினார்கள். ஹாரூஷ் தண்ணீர் கொண்டுவந்து நெருப்பை அனைக்க முயர்சித்தான். அதே நேர்த்தில் போலிஸ் அங்கு வந்தது.

"இங்கு என்ன நடக்கிறது." என்று போலிஸ் அவர்களை விசாரித்தது. பின் அனைவரும் தீயை அனைக்க முயர்சித்தனர். ஆனால் கதிரை காப்பாற்ற முடியவில்லை. பயத்தில் அனைவரும் சிலை ஆனார்கள். போலிஸ் கதிரின் உடலை பரிசோதனைக்கு கொண்டு சென்றார்கள்.

"இங்க என்ன தான் நடக்கிறது? நீங்க இங்க வந்ததிலிருந்து இங்கு இரண்டு உயிர் போனது. இங்கு என்ன நடந்தது என்று கூறுங்கள்." என்று போலிஸ் விசாரித்தார்கள்.

"சார் நாங்க வெளியே விளையாடிக்கொண்டிருந்தோம். திடிர் என்று இந்த அறை தீ பிடித்து எரிந்தது."

"அது எவ்வாறு சாத்தியமாகும். தானாக எப்படி தீ பிடித்து எரியும்."

"அது எங்களுக்கு தெரியவில்லை."

"அனைவரும் வெளியேவா விளையாடிக்கொண்டிருந்தீர்கள். ஒருவர் கூடவா உள்ளே இல்லை?"

"இல்லை சார்."

"நான் உங்கள் அனைவரையும் நாளை விசாரிக்கிறேன். இப்போது நீங்க வெளியே எங்கும் செல்ல கூடாது. ஒரு போலிஸ் உங்களுக்கு காவலுக்கு இருப்பார்." என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார். அனைவரும் அதிர்ச்சியில் ஒரு வார்த்தை கூட பேசவில்ல. திடீர் என்று சிவா ஹம்சியை வினாவினான்.

"ஹம்சி ஹாசினி? பற்றி கூரு." அதை கேட்டதும் ஹம்சி திகைத்து போனால்.
*****

ஹாசினிWhere stories live. Discover now