ஹாசினி

3.8K 132 59
                                    

ஹாரூஷ் கட்டுக்குள் நுழைந்தான். அவன் அங்கு வருவதை உணர்ந்த அந்த உருவம் அவனை நோக்கி சென்றது. கதிர் பயத்தில் தலை கால் புரியாமல் ஓடினான். ஹாரூஷ் கதிர் இருக்கும் திசையை நோக்கி ஓடினான். கதிர் தனக்கு முன் ஒரு கல் இருப்பதை கவனிக்காமல் கல் தடுக்க கீழே விழுந்தான். விழுந்த அதிர்ச்சியில் அவன் கத்த ஹாரூஷ் அந்த சத்தத்தை கேட்டு வேகமாக ஓடி வந்தான்.

ஹாரூஷ் கதிரை கண்டதும்." கதிர்" என்று அடி வயிற்றில் இருந்து கத்தினான். கதிர் தன் ஓட்டத்தை நிருத்திவிட்டு திரும்பி பார்த்தான். ஹாரூஷ்யை கண்டதும் கதிர் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது.

"ஹாரூஷ்" என்று கதிர் கூற இருள் சூல துடங்கியது. இருவரும் அந்த இருளில் தொலைந்தனர்.
*****
ஒரு மணி நேரத்திற்கு பின் இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். ஹம்சி, பூஜா, மாலதி, சிவா அனைவரும் வெளியே இவர்களுக்காக காத்துக்கொண்டு இருந்தார்கள். இவர்கள் இருவரையும் கண்டதும் அனைவரும் எழுந்து இவர்கள் அருகில் ஓடினார்கள்.

"கதிர் என்ன ஆயிற்று" என்று அனைவரும் பதற்றத்துடன் கேட்டார்கள்.

"முதலில் கதிரின் காயத்திற்கு மருந்து போடுங்கள் அதன் பின் பேசலாம்" என்று ஹாரூஷ் கூறினான். பின் அனைவரும் உள்ளே சென்றார்கள். கதிரின் காயத்திற்கு ஹம்சி மருந்து போட்டால். ஹாரூஷ் ஹம்சியை கவணித்துக்கொண்டு இருந்தான். ஹம்சி ஒவ்வொறு முறை அவனை தொடும்போது அவனுக்கு கோபம் பொங்கியது. பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாக இருந்தான். பின் அனைவரும் சாப்பிட சென்றார்கள்.

"ஹாரூஷ் என்ன நடந்தது என்று சொல் எவ்வாறு கதிர்க்கு இவ்வளவு காயங்கள் ஏற்பட்டது" என பூஜா கேட்டாள்.

"எல்லாரும் சாப்பிட்டு முடியுங்கள் பின் அதை பற்றி பேசலாம்" என்று ஹாரூஷ் கூறினான். அனைவரும் சாப்பிட்டு முடித்தார்கள். கதிர் தன் அறைக்கு சென்று தூங்கினான்.

"ஹாரூஷ் இப்போதாது கூறு என்ன நடந்தது என்று" என மாலதி கேட்டாள்.

ஹாசினிWhere stories live. Discover now