கழுத்து சங்கிலி

2.2K 110 19
                                    

{unedited}
*****

"ஹம்சி சாப்பிடலாம் வா" என்று மாலதி அழைத்தாள். ஹம்சி கதிர் உடன் சென்று சாப்பிட அமர்ந்தாள். அவள் தலை நிமிர்ந்து யாரையும் பார்க்கவில்லை.

"ஹம்சி இன்னும் எத்தனை நாள் இங்கு தங்க போகிறாய். நம் கல்யாணத்துக்காக வேலை எல்லாம் செய்ய வேண்டி உள்ளது. நாம் இருவரும் செல்ல வேண்டும் "என்று கதிர் கூறியதும் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. அனைவரும் நிமிர்ந்து வாசலை பார்த்தார்கள். கதிர் இறுதியில் அமர்ந்து இருந்தான்.

"கதிர் நீங்க போய் கதவை திறங்க" என்று சிவா கூறினான். நக்கலாக கதிர் சிவாவை ஒரு பார்வை பார்த்தான். ஹம்சி கவனிக்கிறாள் என்பதை உணர்ந்த கதிர் எதுவும் பேசாமல் எழுந்து கதவை திறக்க சென்றான்.

"ஹம்சி உனக்கு நிச்சயம் ஆகிவிட்டதா??? என்று சிவா கேட்டான். அதற்கு ஹம்சி தலை ஆட்டினால்." இதை ஏன் எங்களிடம் கூறவில்லை " என்று சிவா கேட்டான். அதற்கு ஹம்சி பதில் கூறாமல் அமைதியாக இருந்தாள்.

"பதில் சொல்லு ஹம்சி" என்று பூஜா கேட்டாள். இதை அமைதியாக ஹாரூஷ் கவனித்துக்கொண்டு இருந்தான்.

கதிர் கதவை திறந்தான். வாசலில் யாரும் இல்லை. குழப்பத்துடன் கதவை மூடிவிட்டு திரும்பி வந்தான். கதிர் வந்ததும் ஹாரூஷ் எழுந்து அவன் அறை சென்றுவிட்டான். அவனை பின் தொடர்ந்து மற்றவரும் சென்றார்கள் ஹம்சியை தவிர.

"ஹம்சி வா வெளியே நடக்கலாம் " என்று கதிர் கூறினான். இருவரும் பின் வாசல் வழியாக காட்டுக்குள் சென்றனர்.

"ஹம்சி பல்லவி எப்படி இறந்தாள்" என்று கதிர் கேட்டான்.

"அவ தூக்கு மாட்டி இறந்துவிட்டால்"

"ஏன்"

"எனக்கு தெரியல"

"ஹம்சி அவ தூக்கு மாட்டின இடத்த காட்ட முடியுமா" என்று கதிர் கேட்டான். ஹம்சி தயங்கினாள். அவள் அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த இடத்திற்கு செல்லவில்லை. தயக்கத்துடன் சம்மதித்தாள். இருவரும் அந்த இடத்தை நோக்கி நடந்தார்கள்.
*****
"சிவா என்னால இத ஏற்றுக்கொள்ள முடியல. ஹம்சி எப்படி இத நம்ம கிட்ட இருந்து மறைத்தால்." என்று ஹாரூஷ் புலம்பினான்.

ஹாசினிWhere stories live. Discover now