{badly unedited}
*****
அனைவரும் உரங்கினார்கள் ஆனால் ஹம்சிக்கு உரக்கம் வரவில்லை. எழுந்து ஜன்னல் அருகில் சென்றாள். அந்த உருவம் யார், என்ன வேண்டும் என்று புரியாமல் குழம்பினாள். சட்டென்று கதவு தட்டும் சத்தம் அவளுக்கு கேட்டது. யார் இந்த நேரத்தில் கதவை தட்டுவது என்று யோசித்தாள். பின் மெல்ல கீழ் இறங்கி சென்றாள். பின் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டு பின் வாசல் அருகில் சென்றாள்."யார் அது" என்று வினாவினாள்.
"ஹம்சி நான் தான் கதிர் " என்று அவன் பதில் அளித்தான். அவள் வேகமாக கதவை திறந்தாள்.
"கதிர் இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள் " என்று கேட்டாள்.
"ஹம்சி நான் வெளிய நின்றுக்கொண்டு இருந்தேன். யரோ கதவை தாள்ளிட்டு விட்டார்கள்" என்று கதிர் கூறினான்.
"உள்ள வாங்க" என்று ஹம்சி அழைத்தாள். அவன் உள்ளே வந்ததும் அவள் கதவை சாத்தினாள். அவள் திரும்பி ஆவனை பார்த்தாள். கதிர் அவளை நெருங்கினான். ஹம்சி மனதில் ஒரு பயம் தோன்றியது அவள் பின்னால் அடி எடுத்து வைத்தாள். அவன் நெருங்கினான். அவளுக்கு பயத்தில் இதய துடிப்பு அதிகரித்தது. அவள் அவன் கண்களை பார்த்தாள். சட்டென்று அவன் பின்னாள் இருந்து அந்த உருவம் அவனை தொட கைய நீட்டியது. அதை கண்ட ஹம்சி பயத்தில் கண்களை மூடி கத்தினாள்.
"என்ன ஆயிற்று ஹம்சி" என்று கதிர் புரியாமல் கேட்டான். அவள் சத்தத்தில் அனைவரும் இறங்கி வந்தார்கள்.
"ஹம்சி என்ன நடந்தது" என்று ஹாரூஷ் அவளை கேட்டான்.
அவள் கண் களங்கி நின்றாள். மாலதி பூஜா இருவரும் அவளை வந்து அனைத்தார்கள்.
"என்ன நடந்தது ஹம்சி" என்று சிவா கேட்டான். ஹம்சி நடுங்கினாள்.
"சிவா அவளை எதுவும் கேட்காதே வா ஹம்சி மேலே போகலாம்" என்று பூஜா அழைத்து சென்றாள். அவள் பின் அனைவரும் சென்றனர். கதிர் அவன் அறைக்கு சென்றான்.
"ஹம்சி என்ன நடந்தது நீ எப்போ கீழ போன??? என்று மாலதி கேட்டாள்.
YOU ARE READING
ஹாசினி
Mystery / Thriller5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில்...