காட்டு வழி

2.4K 143 29
                                    


{unedited} please please  forgive my errors. I didn't correct it properly.sorry 😔
*****

மாலதி அலரும் சத்தம் கேட்டதும் அனைவரும் திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் அனைவரும் வேகமாக கீழே இறங்கி ஓடினார்கள்.

"பூஜா, ஹம்சி , நீங்க இரண்டுபேரும் இங்கே இருங்க. நாங்க போய் மாலதியை கூட்டிக்கொண்டு வருகிறோம். நீங்க பத்திரமாக இருங்கள்". என்று கூறிவிட்டு சிவா ஹாரூஷ் இருவரும் காட்டுக்குள் நுழைந்தனர்.

சில வினாடிக்கு முன்:
மாலதி தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கும் போது வீட்டின் எதிரே இருக்கும் மரங்களின் நடுவில் இருந்து ஒரு உருவம் நகர்வதை மாலதி கவனித்தாள்.

"யார் அங்கே??? என்று மாலதி கேட்டாள். பின் அவள் தன்னை மறந்து காட்டுக்குள் நடந்தாள். அவள் பாதி வழி சென்ற பிறகுதான் அவள் தன்னை உணர்ந்தாள். நடு காட்டில் தனியாக நின்றுக்கொண்டு இருந்தாள்.

அப்போது அவள் பின்னால் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.

"யாரது ??? எந்த பதிலும் இல்லை. சட்டென்று அவள் பின்னால் யாரோ வேகமாக ஓடியதும் திரும்பி பார்க்காமல் பயத்தில் ஓடினாள். அவள் வெகு தூரம் ஓடி சென்று. மரத்தின் மீது ஒரு கையும் அவள் நெஞ்சின் மீது ஒரு கையும் வைத்து மூச்சி வாங்கினாள். அப்போது சட்டென மரத்தின் மீது இருந்து ஏதோ விழுந்ததும். பயத்தில் மீண்டும் ஓடினாள்.அவள் எதிரே பத்தடி தூரத்தில் ஒரு மரத்தின் அடியில். ஒரு பெண் திரும்பி அமர்ந்துகொண்டு அடி தொண்டையில் இருந்து அழுதுக்கொண்டு இருந்தாள். அதை பார்த்ததும் மாலதி பயத்தில் எச்சிலை முழுங்கினாள். அவள் இதய துடிப்பு எல்லை மீறியது.

"யார் நீ" என்று அவள் கேட்டதும். அந்த பெண் மெல்ல திரும்பி பார்த்தாள். அவள் முகம் அவள் கூந்தலால் மறைக்கப்பட்டு இருந்தது. அவள் முகம் சரியாக தெரியவில்லை. மாலதி அவளை நோக்கி அடி எடுத்து வைத்தாள். சட்டென்று அந்த பெண்ணின் பின்னால் இருந்து யாரோ வேகமாக வந்து அவள் கூந்தலை பிடித்து அவளை இழுத்து சென்றார். அந்த பெண் வலியில் கத்தினாள். மாலதி என்ன செய்வது என்று அறியாமல் சிலை போல் நின்று அதை கவனித்துக்கொண்டு இருந்தாள். அந்த பெண்ணை இழுத்து சென்றவர் யார் என்று மாலதிக்கு சரியாக தெரியவில்லை.

ஹாசினிWhere stories live. Discover now