ஆதியின் அறைக்குள் நுழைந்த சதீஷிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
"சதீஷ்.. நீ இப்ப பேசிட்டு இருந்த.."என ஆதி ஆரம்பித்தவுடன்..
சதீஷ் பதறியபடி.. "பாஸ்.. பாஸ்.. கோபத்துல எங்கையோ.. கிளம்பி போய்ட்டீங்க.. நான் தான் தேடணும்னு சொல்லிட்டு இருந்தேன்.. வேற ஒண்ணும் சொல்லலை பாஸ்.. வேலையை விட்டு தூக்கிடாதீங்க பாஸ்.."என சொன்னான்.
ஆனால் ஆதியோ.. "உளறாத சதீஷ்.. உன்கூட பேசிட்டு இருந்த.. பொண்ணு.."என இழுத்தான்.
"உளறுறேனா.."என மனதிற்குள் புலம்பியபடி.. "ஆமா பாஸ் பொண்ணு.."என சதீஷ் சொன்னான்.
"அந்தப் பொண்ணு யாரு.. இங்க எதுக்காக வந்திருக்கா.."என ஆதி கேட்டான்.
"ஓ.. அவங்களா.. கவின் eventsல இருந்து வந்திருக்காங்க பாஸ்.. eventsக்கான workலாம் பார்க்க வந்திருக்காங்க.. அன்னைக்கு மீட்டிங் கூட வந்தாங்க.. ஆனா கடைசி நிமிஷத்துல கிளம்பி போய்ட்டாங்க.."என சதீஷ் சொல்வதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான் ஆதி.
"ஏன்.."என ஆதி கேட்டான்.
"தெரியலை பாஸ்.. ஏதோ பெர்சனல் ப்ராப்ளம்னு இப்ப சொன்னாங்க.."என சதீஷ் பதிலளித்தான்.
ப்ராப்ளமா.. என்னவாயிருக்கும்.. அதான் டல்லா இருக்கிறா போல.. என எண்ணினான் ஆதி.
"அவ பேர் என்ன.."என ஆதி சதீஷிடம் கேட்டான்.
"தெரியலை பாஸ்.. நான் வேணா இப்ப போய் கேட்டுட்டு வரவா.."என சதீஷ் கேட்க.. அவனை முறைத்தான் ஆதி.
"எனக்கு அவளை பத்தின full detail வேணும்.. இன்னும் ஒரு மணி நேரத்தில.."என ஆதி சொன்னான்.
"ஓகே பாஸ்.." இதுவரைக்கும் இப்டிலாம் நடந்தது இல்லையே.. அதுவும் ஒரு பொண்ண பத்தி details கேட்கிறாரு பாஸ் என்ற குழப்பத்துடன் அங்கிருந்து வெளியேறினான் சதீஷ்..
"அவளுக்கு என்ன பிரச்சனை.. ஏன் அவ்ளோ சோகமா இருக்கா.. என்ன பிரச்சனை இருந்தா என்ன.. அதை நான் தீர்த்து வைப்பேன்.. இனி அவ எப்பவும் சந்தோஷமா இருக்கணும்.. அது மட்டும் தான் எனக்கு வேணும்.."என தனக்குள்ளே பேசியபடி மித்ராவின் நினைவாக இருந்தான் ஆதி.
YOU ARE READING
தொடுவானம்
General Fictionகனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..