ஆதியும் மித்ராவும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க.. அப்போது கவின் அங்கே வந்தான்.
மித்ராவிடம்.. "last month salary.."என ஒரு கவரை கவின் கொடுக்க.. மித்ராவும் அதை பெற்றுக் கொண்டாள்.
ஆதி மித்ராவிடம்.. மாலதியையும் ரவிச்சந்திரனையும் அழைத்து வருமாறு கூறினான்.மித்ராவும் சரியென தலையசைத்துவிட்டு சென்றாள்.
ஆதி கவினிடம்.. பேசிக் கொண்டிருந்தான். "கவின்.. தப்பா எடுத்துக்க கூடாது.. இனிமே சின்ன சின்ன events எதுவும் உங்களுக்கு வராது.. அதெல்லாம் இனி மித்ராவே பார்த்துப்பா.."என்றான் ஆதி.
"மித்ராவோட திறமையும் சேர்த்து மதிக்கிறீங்க.. நிஜமாவே மித்ரா ரொம்ப லக்கி.."என்றான் கவின்.
"முன்னாடியும் நான் சின்ன eventsம் உங்ககிட்ட கொடுத்ததே மித்ராவை பார்க்க தான்.."என ஆதி சொல்ல..
தான் மித்ராவிடம் இருந்து மறைத்தது புரிந்து கவின்.. "ஐயம்.. சாரி.. அது.."என திணறினான்.
"புரியுது.. ஆனா அதுவும் ஒருவிதத்தில நல்லது தான்.. so leave it.."என்றான் ஆதி.
மாலதியும் ரவிச்சந்திரனும் கவினிடம்.. "யாழினி கல்யாணத்துல எல்லா ஏற்பாடும் ரொம்பவே திருப்தியா இருந்துச்சு.."என சொன்னார்கள்.
கவினுக்கு கொடுக்க வேண்டிய செக்கை இருவரும் சேர்ந்து அவனிடம் கொடுத்தனர்.
"அடுத்து ஆதி மித்ரா கல்யாணத்துக்கும் நீங்களே எல்லா ஏற்பாடும் பண்ணனும்.."என மாலதி சொன்னார்.
கவினும்.. "கண்டிப்பாக.."என சொன்னான்.
சிறிது நேரம் அவர்களோடு பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் கவின்.
ஆதி மித்ரா கௌதம் யாழினி என எல்லாரும் சேர்ந்து இரவு பன்னிரண்டு மணிக்கு கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கார்த்தியும் சந்தோஷமாக "தேங்க்ஸ் அக்கா.. தேங்க்ஸ் அத்தான்.."என மித்ராவையும் ஆதியையும் அணைத்துக் கொண்டான்.
YOU ARE READING
தொடுவானம்
General Fictionகனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..