மித்ராவையும் கார்த்தியையும் ஆதி தன் வீட்டிற்கே அழைத்து வந்தான்.
கார்த்தி முதலில் அதை ஏற்றுக்கொள்ள சிரமப்பட்டாலும்.. யாழினி கௌதம் என எல்லாரும் அவனையும் தங்கள் குடும்பத்தில் ஒருவனாக பார்க்க.. கார்த்தியும் சற்று இயல்பானான்.
யாழினி கௌதமின் கல்யாண ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது.
மாலதியும் ரவிச்சந்திரனும் ஆதி மித்ராவின் கல்யாணத்தையும் நடத்த ஆசைப்பட்டனர்.
ஆனால் ஆதி.. "அப்பா அம்மோவோட கல்யாண நாள்ல எங்க கல்யாணம் நடக்கணும்னு நான் ஆசைப்படுறேன்.."என சொன்னான்.
"அதுக்கு இன்னும் நாலு மாசம் இருக்கு ஆதி.. அதுக்கு முன்னாடியே பண்ணிக்கலாமே.."என மாலதியும் ரவிச்சந்திரனும் கேட்டனர்.
ஆதி.. மறுத்து பேச.. சரி அவன் விருப்பம் போலவே நடக்கட்டும் என விட்டுவிட்டனர்.
ஸ்வேதா மீண்டும் மீண்டும் தோற்றுப்போன கோபத்தில் தன்னறையில் இருந்த பொருள்களை உடைத்தாள்.
சந்திரமதி அவளை சமாதானம் செய்தார்.
"எல்லாம் உங்களால தான் மாம்.. ஆதியை கல்யாணம் பண்ணிக்கோ.. சொத்து வரும்னு சொல்லி இப்டி யாரோ ஒருத்திகிட்ட என்னை தோத்துப்போக வச்சிட்டீங்க.."என தன் கோபத்தை சந்திரமதியிடம் காட்டினாள்.
சந்திரமதி அவளிடம்.. "இன்னும் கல்யாணத்துக்கு நாலு மாசம் இருக்கு ஸ்வேதா.. அதுக்குள்ள நாம எதாவது பண்ணலாம்.."என சொன்னார்.
"ஏதாவது பண்ணனும் மாம்.. நான் தோத்துப்போக கூடாது.."என ஸ்வேதா சொன்னாள்.
சந்திரமதியும் மகாதேவனும் இன்னும் இந்த நாலு மாதத்திற்குள் ஆதியையும் மித்ராவையும் பிரிக்க ஏதாவது செய்ய முடியுமா என யோசித்துக் கொண்டிருந்தனர்.
அன்று இரவு சாப்பிட்டு முடித்துவிட்டு எல்லோரும் ஹாலில் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
ஆதியும் கௌதமும் பிஸினஸ் பற்றி பேசிக் கொண்டிருக்க.. யாழினி கௌதம் மேல் சாய்ந்தபடி போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள்.
YOU ARE READING
தொடுவானம்
General Fictionகனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..