❤ 18 ❤

5.4K 234 22
                                    

ஆதி முகமெல்லாம் வியர்வை வழிய.. பயத்தோடு கீழே வழிந்திருந்த இரத்தத்தை பார்த்தபடி நின்றிருந்தான்.

ஆதியை பார்த்த மித்ரா.. பதற்றத்தோடு.. "ஆதி.. ஆதி.. என்னாச்சு.."என பதறினாள்.

ஆதி இரத்தத்தை வெறித்து பார்ப்பதை கவனித்த மித்ரா.. "ஆதி.. வாங்க போகலாம்.. அந்தக் குழந்தைக்கு ஒன்னுமில்லை.. வாங்க.."என சொல்லியபடி ஆதியை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.

ஆதிக்கு அளவுக்கு அதிகமாக வியர்வை வழிய.. உடல் நடுங்க.. மித்ராவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான்.

மித்ராவுக்கு என்ன செய்வதென புரியவில்லை.. ஆதியின் முகத்தில் வழிந்த வியர்வையை தன் துப்பட்டாவால் துடைத்துவிட்டாள்.

"ஆதி.. ஆதி.. என்னாச்சு.."என பதறினாள் மித்ரா.

ஆனால் ஆதி எதுவும் பேசும் நிலையில் இல்லை. "ஆதி.. வாங்க வீட்டுக்கு போகலாம்.."என மித்ரா ஆதியை வீட்டுக்கு அழைத்து வந்தாள்.

ஆதியின் அறைக்கு அழைத்துச் செல்லாமல்.. கீழே இருந்த அறையில் இருந்த கட்டிலில் ஆதியை படுக்க வைத்தாள் மித்ரா.

Fanஐ போட்டுவிட்டு.. "ஆதி.. ஆதி.. "என அழைத்தாள் மித்ரா.

ஆதி.. மித்ராவின் முகத்தை பார்த்தான். "ஆதி.. தண்ணீ எடுத்துட்டு வரவா.."என்றாள் மித்ரா.

வேண்டாம் என்பது போல் தலையசைத்தான் ஆதி.

சில நிமிடங்கள் கடந்த பின்.. ஆதி மித்ராவை பார்த்து.. "மித்ரா.. ப்ளீஸ்.. என் கூடவே இரு.."என்றான் கெஞ்சலாய்.

மித்ரா மறுப்பேதும் சொல்லாமல் ஆதியின் அருகிலே அமர்ந்து இருந்தாள்.

ஆதி தூங்கிவிட்டது போல தெரிந்தது. மித்ரா.. பாலை சூடு பண்ணிவிட்டு ஆதியை எழுப்பலாம் என கிச்சனுக்குள் வந்தாள்.

சாரு.. மித்ராவுக்கு போன் செய்து.. சந்துருவோடு வெளியே சாப்பிட்டு விட்டு வருவதாக சொன்னாள்.

மித்ராவுக்கும் சாப்பிட தோணலை.. ஆதியும் சாப்பிடுவானா.. என தெரியவில்லை.. அதனால் பாலை மட்டும் காய்ச்சினாள்.

தொடுவானம்Where stories live. Discover now