ஆதி மித்ராவின் திருமண நாள் நெருங்கியது..
சந்திரமதியின் முன் வந்து நின்றான் கௌதம்.. "எல்லா வேலையும் முடிச்சிட்டேன் டா.. யாழினியை எந்த வேலையும் பார்க்க விடலைடா நான்.."என்றார் பாவமாக.
கௌதம் சிரித்தபடி.. "இன்னும் பத்து நாளைக்கு நீங்க எந்த வேலையும் பார்க்க வேண்டாம் மா.."என்றான்.
அவன் வார்த்தையை நம்ப முடியாமல்.. சந்திரமதி அவனை பார்த்தார்.
"நிஜமா தான்.. மா.. அத்தான் கல்யாணத்துக்காக உங்களுக்கு இந்த special offer.."என்றான் கௌதம்.
அவன் சொன்னதை கேட்டவர்.. "அதுக்குள்ள நாலு மாசம் ஆகிடுச்சா.."என்றார்.
கௌதம் சிரித்தபடி.. "அது கூட தெரியலையா.. ரொம்ப நல்லது.."என்றான்.
ஆதி மித்ராவின் திருமண ஏற்பாடுகளை மாலதியும் ரவிச்சந்திரனும் முன்னின்று பார்த்தனர்.
ஆதிக்கு அவன் அப்பா அம்மா இல்லாத குறை நினைவில் வராத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தனர்.
மித்ராவையும் தன் மகள் போல பார்த்துக் கொண்டார் மாலதி. அவர்களின் நெருக்கமும் அதிகரித்திருந்தது.
கார்த்தி தன் அக்கா விரும்பிய வாழ்க்கை அவளுக்கு கிடைக்க போகும் மகிழ்ச்சியாக இருந்தான்.
கௌதம் ரவிச்சந்திரனுக்கு கல்யாண ஏற்பாடுகளில் உதவியாக இருந்தான்.
யாழினி தன் விருப்பம் போல தான் டெக்கரேஷன் இருக்க வேண்டுமென எல்லாவற்றையும் அவளே பார்த்துக் கொண்டாள்.
சந்திரமதி மகாதேவன் ஸ்வேதா மூவரும் தங்கள் அறையில் பாவமாக அமர்ந்திருந்தனர்.
மகாதேவன்.. "எல்லாருக்கும் வேலை சொல்லிட்டு இருந்தேன்.. இப்ப யார் யாரோ சொல்ற வேலையை நான் பார்க்க வேண்டியதா இருக்கு.."என்றார்.
சந்திரமதியோ.. "நீங்களாவது பரவாயில்லை.. நான் பெத்த பிள்ளையே என்னை பாடாபடுத்துறான்.."என்றார்.
"இரண்டு பேரும் கொஞ்சம் வாயை மூடுறீங்களா.. எல்லாம் உங்களால தான்.."என சலித்துக் கொண்ட ஸ்வேதா.. "இந்த பத்து நாளாவது என்னை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்க.."என்றவாறு படுத்துக் கொண்டாள்.
YOU ARE READING
தொடுவானம்
General Fictionகனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..