❤ 28 ❤

5.7K 237 51
                                    

மித்ரா எதற்காக இப்டி நடந்து கொள்கிறாள் என புரியாமல்.. என்ன காரணம் என யோசித்தபடி.. கனத்த மனதோடு வீட்டுக்கு வந்தான் ஆதி.

ஆதி தன்னறைக்கு செல்ல.. அங்கே ஸ்வேதா இருந்தாள்.

அவளைக் கண்ட ஆதி.. "வெளியே போ.."என சற்று மெதுவாக சொன்னான்.

அதை கண்டு கொள்ளாமல் ஸ்வேதா.. "அத்தான்.. நைட் லாம் எங்க போனீங்க.."என பேசினாள்.

"வெளியே போன்னு சொன்னேன்.."என கோபத்தில் கத்தினான் ஆதி.

ஸ்வேதா வெளியே சென்றதும் வேகமாக கதவடைத்தான் ஆதி.

ஆதியின் சத்தம் கேட்டு அங்கே வந்த யாழினி.. "ஸ்வேதா.. அண்ணா இல்லாதப்ப எதுக்கு அவன் ரூமுக்கு போன.. அது அவனுக்கு பிடிக்காது.."என சொல்ல.. ஸ்வேதா கோபமாக அங்கிருந்து சென்றாள்.

யாழினி ஆதியை கூப்பிட்டுக் கொண்டேயிருக்க.. ஆதி கதவை திறக்கவேயில்லை.. அன்று முழுக்க..

"மாம்.. நீங்க சொன்னதால தான்.. எனக்கு கொஞ்சங்கூட பிடிக்காத அந்த ஆதியை கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதிச்சேன்.. ஆனா அவன் என்னை எப்டி இன்சல்ட் பண்றான் பாருங்க.."என சந்திரமதியிடம் ஸ்வேதா கத்திக் கொண்டிருந்தாள்.

"ஸ்வேதா.. நம்ம காரியம் நடக்கணும்னா நாம பொறுமையா இருந்து தான் ஆகணும்.." என சந்திரமதி சொன்னார்.

"ஆமா.. அவன் வேற யாரையாவது கல்யாணம் பண்ற வரைக்கும் நீங்க பொறுமையாவே இருங்க.."தன் கோபத்தை சந்திரமதியிடம் கொட்டித் தீர்த்தாள் ஸ்வேதா.

மாலதியும் ரவிச்சந்திரனும் கூட பலமுறை கூப்பிட்டும் ஆதி அன்று முழுக்க தன்னறையை விட்டு வெளியே வரவில்லை.

ஆதியை அப்டி பேசியிருக்க கூடாது.. தப்பு பண்ணிட்டேன் என எண்ணி எண்ணி மித்ரா அழுது கொண்டேயிருந்தாள்.

அவள் மேல் கோபமாக இருந்த கார்த்தி.. அவளின் அழுகையை தாங்க முடியாமல்.. "அக்கா சாரி.. நான் உன்கிட்ட அப்டி பேசிருக்க கூடாது.. சாப்பிட வா.. திரும்பவும் காய்ச்சல் வந்துட போகுது.. அழாத.."என அழுதபடியே அவளை சமாதானம் செய்தான்.

தொடுவானம்Where stories live. Discover now