முதல் முத்தத்தின் அதிர்ச்சியில்.. சந்தோஷத்தில்.. மித்ரா அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே இருந்தாள்.
அப்போது வந்த சாரு.. மித்ராவின் நிலையை கண்டு பதறியபடி.. "மித்ரா.. என்னாச்சு.. ஏன் இப்டி இருக்க.."என்றாள்.
சாரு மித்ராவை பிடித்து உலுக்க.. "சாரு.. சாரு.."என்றபடி அவளை அணைத்துக் கொண்டாள் மித்ரா.
சாருவோ எதுவும் புரியாமல்.. "ஏய்.. லூசு.. என்னாச்சு.."என கேட்டாள்.
"நான்.. நான்.."என மித்ரா தடுமாறினாள்.
"சொல்லு மித்ரா.. என்ன.."என்றாள் சாரு.
"நான்.. நான்.. உடனே.. அவரை பார்க்கணும்.." என்றபடி மித்ரா எழுந்து மாடிக்கு ஓடினாள்.
"அடிப்பாவி.. இதுக்கு ஏன் அப்டி உட்கார்ந்து இருந்தா.."என நடப்பது புரியாமல் சாரு.. தனக்குள்ளே பேசிக் கொண்டாள்.
அங்கே.. ஆதியோ.. "ச்சே.. நான் ஏன் இப்டி நடந்துக்கிட்டேன்.. மித்ரா என்ன பத்தி என்ன நினைப்பா.. ச்சே.."என புலம்பிக் கொண்டிருந்தான்.
மித்ராவின் காலடி ஓசை கேட்டு.. அங்கே திரும்பிய ஆதி.. தான் நடந்து கொண்டதற்கு அவள் என்ன நினைக்கிறாளோ என அவளை பார்க்கவே தயங்கினான்.
அவனை பார்க்க வேண்டுமென வேகமாக வந்த மித்ரா.. அவனைக் கண்டதும் பேச்சு வராமல்.. தயங்கி நின்றாள்.
ஆதி.. "மித்ரா.. ஐ.. ஐயம்.."என தடுமாற..
மித்ரா.. "ஐ லவ் யூ ஆதி.."என்றபடி அவன் இதழ்களில் தன் இதழ்களை பதித்தாள்.
சில நொடிகள் கடந்த பின்னரே.. ஆதி.. மித்ராவின் செயலை உணர்ந்தான்.
ஆதி மித்ராவின் கண்களைக் காண.. அதிலிருந்த காதல்.. "ஐ லவ் யூ மித்ரா.."என்றான் ஆதி.
மித்ராவும் ஆதியின் கண்களை பார்த்தபடி.. "ஐ லவ் யூ ஆதி.."என்றாள்.
ஆதி மித்ராவை அணைத்துக் கொள்ள .. நேரம் கடப்பது தெரியாமல் இருவரும் இருந்தனர்.
"ஆதி.. நான் போகவா.."என்றாள் மித்ரா.
"கொஞ்ச நேரம் இங்கையே இரு.."என சுவரில் சாய்ந்தபடி.. தரையில் ஆதி உட்கார.. அவனருகில் உட்கார்ந்தாள் மித்ரா.
ESTÁ A LER
தொடுவானம்
Ficção geralகனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..