மித்ரா வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். ஆதி இன்னும் கிளம்பி வரவில்லை..
டீயை கொடுத்துவிட்டு வரலாம் என மித்ரா ஆதியின் அறைக்கு சென்றாள்.
ஆதியின் அறைக்கதவு பூட்டாமல் தான் இருந்தது.. மித்ரா கையால் தள்ளவும் திறந்துவிட்டது.
ஆதி இன்னும் எழும்பாமல் தூங்கிக் கொண்டிருந்தான். மித்ரா அவனை எழுப்பினாள்.
ஆதியோ மித்ராவையும் சேர்த்து அணைத்தபடி.. "இன்னும் கொஞ்ச நேரம்.. தூங்கிக்கிறேன்.. ப்ளீஸ்.."என்றான்.
"ஆதி எழுந்திருங்க.."என்றாள் மித்ரா.
ஆதி மித்ராவின் பேச்சை காதில் வாங்காமல் அவளை மேலும் இறுக்கி அணைத்தான்.
"மித்ரா.."
"ம்.."
"தினமும் வந்து இப்டியே எழுப்பிவிடேன்.."என்றான் ஆதி.
"சரி.. இப்ப எழுந்திருங்க.."என மித்ரா ஆதியின் அணைப்பிலிருந்து விடுபட.. முயற்சித்தாள். ஆனால் ஆதி அவளை விடுவதாயில்லை.
"வேலைக்கு போகணுமா.. வேண்டாமா.. விடுங்க ஆதி.."என மித்ரா சிணுங்க.. "ம்.. போக வேண்டாம்.."என்றான் ஆதி.
"ம்.. அப்டியா.. நான் வேலைக்கு போகணும்.. என்னை விடுங்க.."என்று ஒருவழியாக அவனிடமிருந்து விலகி எழுந்து நின்றாள் மித்ரா.
"டீ எடுத்துட்டு வந்துட்டேன்.. சீக்கிரம் குளிச்சிட்டு கீழ வாங்க.."என்றாள் மித்ரா.
சரியென தலையசைத்தபடி ஆதியும் எழுந்தான்.
ஆதி கிளம்பி கீழே வர.. மித்ரா ஆதி சாப்பிட.. சூடாக தோசை எடுத்து வைத்தாள்.
"மித்ரா.. என் போன் இங்க இருக்கா.."என்றான் ஆதி.
"இங்க இல்லையே.."என்றாள் மித்ரா.
"ஆபிஸ்ல வச்சிட்டு வந்திருப்பேனோ.. உன் போன் கொடு.. போன் பண்ணி பார்க்கிறேன்.."என ஆதி கேட்க.. மித்ரா போனை கொடுத்தாள்.
ஆதி ஆபிஸ்ல தான் போனை வச்சிட்டு வந்திருந்தான்.. சதீஷ் தான் போனை அட்டெண் பண்ணான்.
YOU ARE READING
தொடுவானம்
General Fictionகனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..