ஆதி டயர்டாக வீட்டுக்கு வந்தான்.. அவனை பார்த்த மித்ரா.. "என்ன ரொம்ப டயர்டா இருக்கீங்க.. உங்க பாஸ் ரொம்ப வேலை கொடுத்தாரா.."என கேட்டாள்.
"எனக்கு வேலை கொடுக்கிறதுக்கு யார் இருக்கா.."என மனதுக்குள் நினைத்துக் கொண்டான் ஆதி.
அப்போது கார்த்தியும் அங்கே வர.. "நீ எப்ப ஊர்ல இருந்து வந்த.."என ஆதி அவனிடம் கேட்டான்..
"காலையில வந்தேன்.."என கார்த்தியும் பதிலளித்தான்.
"ஊர்ல ப்ரெண்ட்ஸ பார்த்ததும் இங்க வரத் தோணலைன உனக்கு.."என ஆதி கார்த்தியிடம் பேசிக் கொண்டிருந்தான்.
மித்ரா ஆதியிடம்.. "நாளைக்கு ப்ரீயா இருப்பீங்களா.."என கேட்டாள்.
"ஏன்.. என்ன விஷயம்.."என ஆதி கேட்டான்.
"சாருவுக்கு கிப்ட் வாங்கணும்.. அதான்.."என மித்ரா சொன்னாள்.
"ம்.. போலாம்.."என ஆதி சொன்னான்.
"அக்கா.. என்ன கிப்ட் வாங்கப் போற.."என கார்த்தி கேட்டான்.
"தங்க மோதிரம் வாங்கலாம்னு நினைச்சேன்.."என மித்ரா சொன்னாள்.
"அக்கா.. அப்ப உனக்கும் கொலுசு வாங்கலாம்.."என கார்த்தி சொன்னான்.
"இப்ப வேண்டாம் கார்த்தி.. நீ காலேஜ்ல சேர்ந்த பிறகு வாங்கிக்கலாம்.."என மித்ரா சொன்னாள்.
"நீ இப்டித்தான் சொல்லுவனு எனக்கு தெரியும்.. அதான் நான் தனியா காசு சேர்த்து வச்சிருக்கேன்.. இப்பவே வாங்கலாம்.."என கார்த்தி சொல்ல..
"ம்.. சரி வாங்கலாம்.."என மித்ரா சொல்லவும்.. கார்த்தி மிகவும் உற்சாகமானான்.
ஆதி அவர்கள் இருவரையும் சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அடுத்த நாள்.. நகைக்கடையில்..
"அக்கா.. பர்ஸ்ட் கொலுசு வாங்கிடலாம்.. நானே செலக்ட் பண்றேன்.."என கார்த்தி சொன்னான்.
"ம்.. சரிடா.."என சொன்னாள் மித்ரா.
கார்த்தி மித்ராவுக்கு கொலுசை தேர்வு செய்ய.. ஆதியும் மித்ராவும் அவனை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
YOU ARE READING
தொடுவானம்
General Fictionகனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..