ஆதியின் புகைப்படத்துடன் அலைபேசி ஒளிர.. மித்ரா அதை வெறித்தபடி மேலும் அழத் தொடங்கினாள்."அக்கா.. என்ன பண்ற.. போன் அடிக்குது பாரு.."என கார்த்தி கதவை தட்டினான்..
எதையும் காதில் வாங்கும் நிலையில் மித்ரா இல்லை.
ஷவரை திறந்துவிட்டு.. அதில் நனைந்தபடி அழுது கொண்டேயிருந்தாள் மித்ரா.
***
எல்லாரும் வீட்டில் இருப்பதால்.. அங்கே செல்ல நினைத்த ஆதி.. மித்ராவிடம்.. வீட்டுக்கு வரமாட்டேன் என சொல்ல நினைத்து போன் செய்தான்.
சில முறை மீண்டும் மீண்டும் அழைத்தும் மித்ரா போனை எடுக்காததால்.. சரி வேலையா இருப்பா.. அப்புறம் சொல்லிக்கலாம் என நினைத்து விட்டுவிட்டான் ஆதி.
ஆதி வீட்டுக்கு செல்ல.. நெடுநாளைக்கு பிறகு ஹாலில் மாட்டியிருந்த போட்டோவை.. பார்த்தபடி நின்றிருந்தான்.
அப்போது அங்கே வந்த யாழினி.. ஆதியின் தோள் சாய்ந்தபடி.. "அண்ணா.. சூப்பரா இருக்குல்ல.. போட்டோ மாட்டின பிறகு.."என்றாள்.
"ம்.."என்றான் ஆதி.
மித்ரா ஏன் போனை எடுக்கலை.. கார்த்திக்கு போன் பண்ணலாமா.. என ஆதி யோசித்த வேளை.. சந்திரமதி ஸ்வேதாவுடன் அங்கே வந்தார்.
"ஆதி.. ஸ்வேதா.. டின்னர் வெளியே சாப்பிடணும்னு சொல்றா.. நீ கூட்டிட்டுப் போறீயா.."என ஆதியிடம் கேட்டார்.
"ஆங்.. சரி அத்தை.."என ஆதி சொன்னான்.
யாழினி.. "என்ன ஸ்வேதா.. முன்னாடியே சொல்லிருந்தா.. நானும் வந்திருப்பேன்ல.."என்றாள்.
"வந்துருவனு தான் சொல்லலை.."என வாய்க்குள்ளே முணுமுணுத்தாள் ஸ்வேதா.
"ஏன் குட்டிமா.. நீ வரலையா.."என ஆதி கேட்டான்.
"இல்லை ணா.. வரலை.."என்றாள் யாழினி.
அப்போது.. ஆதிக்கு போன் வர.. "ஹலோ.."என்றவன்.. பதற்றத்துடன்.. "சரி.. நான் உடனே வர்றேன்.."என்றான்.
"ஆதி.. டின்னர்.."என சந்திரமதி தொடங்க..
"இன்னொரு நாள் கூட்டிட்டுப் போறேன் அத்தை.. நான் இப்ப உடனே போகணும்.."என ஆதி அங்கிருந்து கிளம்பினான்.
YOU ARE READING
தொடுவானம்
General Fictionகனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..