❤ 38 ❤

5.5K 217 29
                                    

அடுத்த நாள்.. ஹாலில்..

சந்திரமதி மகாதேவன் ஸ்வேதா மூவரும் தாங்கள் நினைத்தது நடக்காதது மட்டுமல்லாமல்.. ஆதி சொன்னதை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயத்திலும் இருப்பதை எண்ணி நொந்தபடி இருந்தனர்.

அப்போது அங்கே கௌதமும் யாழினியும் வந்தனர்.

சந்திரமதி மகாதேவன் ஸ்வேதாவை பார்த்து சிரித்தபடி.. கௌதம் யாழினியிடம்.. "யாழினி.. உன்கிட்ட ஒன்னு கேட்கவா.."என கேட்டான்.

"ம்.. கேளு.."என்றாள் யாழினி.

"நான் உன்கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சிட்டேன்.. இல்ல பொய் சொல்லிட்டேன்னா என்ன பண்ணுவ.."என கௌதம் கேட்டான்.

"என்னது.."என யாழினி அவனை முறைத்தவாறே கேட்டாள்.

"உன்கிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன்னா.. என்ன பண்ணுவ.."என கேட்டான் கௌதம்.

"என்கிட்ட பொய் சொல்லுவியா.. இந்த யாழினி கிட்ட பொய் சொல்லுவியா.."என கேட்டவாறே.. அவன் தலைமுடியை பிடித்து ஆட்டினாள்.

யாழினி முடியை பிடித்து இழுப்பது வலித்தாலும்.. கௌதம் தன் அப்பா அம்மாவையும் ஸ்வேதாவையும் திரும்பி பார்த்தான்.

அவர்கள் யாழினியை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க.. அதில் அவள் அடித்த வலி மறந்து சிரித்தான் கௌதம்.

அவன் முதுகில் இரண்டு குத்து குத்தினாள் யாழினி.

அப்போது அங்கே வந்த மாலதி.. "யாழினி.. என்ன பண்ற.. அவனை விடு.. கல்யாணம் ஆகிடுச்சே தவிர.. இன்னும் குழந்தை மாதிரி நடந்துக்கிற.."என சலித்துக் கொண்டார்.

"என்கிட்ட பொய் சொல்லுவேன்னு சொல்றான்.. அவனை சும்மா விடச் சொல்றீங்களா.."என யாழினி கேட்டாள்.

"அவன் சும்மா தான கேட்டான்.."என அவளிடம் சலித்துக் கொண்டவர்.. "பாவம் டா.. நீ.. இவளை எப்டி சமாளிக்கப் போறீயோ.."என கௌதமிடம் சொன்னார்.

"அதெல்லாம் எங்க அம்மா பார்த்துப்பாங்க.. இல்லை மா.."என்றான் கௌதம் சந்திரமதியை பார்த்து.

தொடுவானம்Where stories live. Discover now