💕 03 💕

5.9K 264 25
                                    

வீட்டுக்கு வந்த ரஞ்சனிடம் பொதுவான நல விசாரிப்பு நடந்து முடிந்து.. குடும்பத்தினர் எல்லாரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர்.

“நாளைக்கு நல்ல நாள்.. நாளைக்கே நீ ஸ்கூல் கரஸ்பாண்டட்டா பொறுப்பு ஏத்துக்கோ.. இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடு..” என சிவநாதன் ரஞ்சனிடம் சொன்னார்.

“ரெஸ்ட் எடுக்கிறதுக்கு முன்னால.. நான் ப்ரெஸ் ஆகிட்டு வர்றேன்.. பாட்டி.. அதுக்குள்ள நீங்க எனக்கு இட்லியும் சாம்பாரும் ரெடியா வச்சிருக்கணும்..” என்றான் ரஞ்சன்.

“அதுக்கென்னடா.. இதோ இப்ப ரெடி பண்ணிடுறேன்..” என்ற ரஞ்சனின் பாட்டி கமலா எழுந்து சென்றார். மேகலாவும் அவருக்கு உதவ கிச்சனுக்கு சென்றுவிட்டார்.

“அண்ணா.. எனக்கு என்னெல்லாம் வாங்கிட்டு வந்த..” என ரஞ்சனிடம் கேட்டாள் மகதி.

“எல்லாம் உனக்கு தான்.. போய் எடுத்துக்கோ.. அதை வச்சே இன்னும் ஒரு வாரத்துக்கு காலேஜ்ல சீன் போடு.. போ..” என்றான் ரஞ்சன் கேலியாக.

“ச்சீ.. போ.. நான் லாம் சீன் போடமாட்டேன்..” என்றபடியே ரஞ்சன் கொண்டுவந்திருந்த பேக்கை பிரித்துக் கொண்டிருந்தாள் மகதி.

அண்ணன் தங்கை இருவரும் தங்கள் செல்ல சண்டையை தொடங்கியிருக்க.. சிவநாதனும் திலீபனும் ரசனையோடு அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சந்திரன் வருவதை கவனித்த திலீபன்.. அவனிடம் விவரம் கேட்பதற்காக எழுந்து சென்றார்.

சந்திரனை கவனித்துவிட்டு ரஞ்சனும் அங்கே வர.. “அவன் பக்கத்து வீட்டில ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்துருப்பான் போல.. அந்த விவரம் கிடைச்சுது.. அவங்க மூலமா கேஸ் போட்டு அவனை அரெஸ்ட் பண்ணியாச்சு பா.. அந்த பொண்ணு பேரும் வெளியே வராம பார்த்துக்கலாம்.. வேற எந்த ப்ராப்ளமும் இல்லை பா..” என்றான் சந்திரன் திலீபனிடம்.

“ப்ரெண்ட் நான் வந்திருக்கேன்.. என்கிட்ட கூட பேசாம அப்பா கிட்ட என்ன ரிப்போர்ட் பண்ணிட்டு இருக்க..” என ரஞ்சன் சந்திரனிடம் கேட்டான்.

உள்ளங்கவர்ந்த கள்வனவன்..Where stories live. Discover now